Saturday 16 March 2013

அவசியமான மறுபதிவு:தமிழ்ப்பண்பாடுதான் இந்துப்பண்பாடாக பரிணமித்திருக்கிறது!!!



பூர்வத்திலேயே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.ஆந்திரர்களுக்கும் சோழர்க்கும் கல்யாண கொள்வினை, கொடுப்பினை இருந்த காலத்தில் இப்படி பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.இப்போது வட நாட்டில் திராவிட் (Dravid)என்று குடும்பப்பெயர் போட்டிருக்கிறார்கள்.
ஆனால் வெளிமாநிலங்களில் குடியேறிய இந்த திராவிடர்களுக்கு தமிழ் மொழி போகப் போக தெரியவில்லை.
ஒரு பகுதியில் குடியேறும் பிற பகுதி மக்கள் நாளாவட்டத்தில் தம் தாய் மொழியை மறந்துவிடுகிறார்கள்.
ஆரியர் திராவிடம் என்ற பேதம் இரு வேறு இனமாக பேதப்படுத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை.பஞ்ச திராவிடர்கள் என்பது பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டதேயன்றி வேறில்லை;பிற்காலத்தில்தான் இதை அரசியல் சுயநலத்திற்காக இனப்பாகுபாடாக்கிவிட்டனர்.
ஆதாரம்:463-464,தெய்வத்தின் குரல் பாகம்-1
காஞ்சிப் பரமாச்சாரியார் அவர்கள்.வானதிப் பதிப்பகம் வெளியீடு.

No comments:

Post a Comment