Saturday 16 March 2013

பாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு

பாரதம் அன்றும் இன்றும்



கடந்த 10,000 ஆண்டுகளாக எந்தநாட்டின் மீதும் பாரதம் படையெடுக்கவில்லை.

கணக்கிடுவதற்குத் தேவையான பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது பாரதம் தான்.பூஜ்ஜியத்திற்கு மதிப்பைக் கண்டறிந்தவர் தமிழ்நாட்டுக் கணிதமேதை ராமானுஜம்தான்.

உலகின் முதல் பல்கலைக்கழகம் தட்சசீலம் ஆகும்.இது கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.
உலகம் முழுவதுமிருந்து 10,500 மாணவர்கள் இங்கு பயின்றனர்.600 க்கும் மேற்பட்ட பாட வகைகள் இங்கு கற்பிக்கப்பட்டன.

ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி சமஸ்க்ருதம் தான்.கணிப்பொறி எனப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்க ஏற்ற மொழி சமஸ்க்ருதம் தான் அமெரிக்கப் பத்திரிகையான
போர்ப்ஸ் 1987 ஜீலை மாத வெளியீட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலத்தில் மனிதன் கண்டறிந்த முதல் வைத்திய முறை ஆயுர்வேதம் தான்.இதை சரகர் என்ற இந்து ரிஷி கண்டுபிடித்து முறைப்படுத்தினார்.இன்று இங்கிலாந்தின் அரசி எலிசபெத் யோகாசனம் சார்ந்த ஆயுர்வேத வைத்திய முறையை பின்பற்றி வருகிறார்.45 வயதான பாப் பாடகி மடோனாவின் குரல் வளமும், கட்டுடலும் யோகாசனப்பயிற்சியால் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

நாவிகேஷன் என்ற சொல்லப்படும் கப்பல்,படகு செலுத்தும் கலையை 6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து நதிக்கரையில் நிகழ்த்திக்காட்டியவர்கள் இந்துக்கள்.நவ்கத் என்ற சமஸ்க்ருத சொல்லே ஆங்கிலத்தில் நாவிகேஷன் ஆனது.

அதே போல தீ என்றால் நெருப்பு.ஆதிகாலத்தில் தீயை தமிழர்கள் வழிபட்டார்கள்.ஆங்கிலத்தில் கடவுள் என்ற வார்த்தைக்கு thee என்று பெயர்.எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பே இந்துயாவுடன் இங்கிலாந்து வாணிகத் தொடர்பு இருந்ததற்கு இந்த வார்த்தை ஒரு ஆதாரமாகும்.

பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்ததாக கூறுவதற்கு முன்பே கி.பி.5 ஆம் நூற்றாண்டிலேயே பாரதத்தின் பட்டாச்சாரியார் கண்டுபிடித்துவிட்டார்.மிகச்சரியாக
365.258756584 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியார் கண்டுபிடித்தார்.

கணிதத்தில் பையின் மதிப்பை கணிக்கிட்டவர் போதாயனார் என்ற பாரத ரிஷி ஆவார்.ஐரோப்பிய கணித மேதைகள் பிதோகரஸ் தேற்றத்தை விளக்குவதற்கு முன்பே அதாவது 6 ஆம் நூற்றாண்டிலேயே போதயனார் விளக்கிவிட்டார்.

கணிதத்தில் அல்ஜீப்ரா,டிரிக்னாமெட்ரி,கால்குலஸ் ஆகியவை பாரதத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.குவார்ட்ராடிக் சமன்பாடுகள் ஸ்ரீதராச்சாரியார் என்ற பாரதீயரால் 11 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

கம்பியில்லாத தகவல் தொடர்பை பாரதத்தின் ஜகதீஷ் சந்திர போஸ் முதலில் கண்டுபிடித்தார்.மார்க்கோனி அல்ல என அமெரிக்க நிறுவனமான I.E.E.E. உறுதியாக கூறுகிறது.

சுஸ்ருதர் என்ற பாரதீயர் 2600 வருடங்களுக்கு முன்பே சிசேரியன்,கேடராக்ட்,செயற்கைக்கால்,கை, கால் எலும்புமுறிவு, மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.
அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்துவ சிகிச்சையும் செய்து இருக்கிறார்.125 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக் கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.

அமெரிக்க டாக்டர்களில் 38%,விஞ்ஞானிகளில் 12% நாசாவில் 36%, மைக்ரோசாப்டில் 34%, இன் டெல்லில் 17%,சிராக்ஸ் ஸில் 13%, ஐ.பி.எம்மில் 28% இந்தியர்கள் பணிபுரிகிறார்கள்.
இவ்வளவு பெருமைகள் இருந்தும் நாம் ஏன் இந்த பூமியை ஆளக்கூடாது? நமக்கு இப்போதையத் தேவை; தேச பக்தி நிறைந்த சர்வாதிகாரி!!!

No comments:

Post a Comment