Thursday 22 March 2012

இனிய தெலுங்கு வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள்



வாசகர்கள் அனைவருக்கும் இனிய தெலுங்கு வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நன்னாளில் ஓம் சிவ சிவ ஓம் ஜெபிப்பது நமக்கு அளவற்ற நன்மையைத் தருவதோடு முற்பிறவி வினைகள் விரைவில் கரையும்.

நன்றிகள் குருநாதர்


Wednesday 14 March 2012

இறைவனை ஏன் வணங்க வேண்டும்?


நன்றி மறப்பது நன்றன்று :-
இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள்.


விலங்குகளும்
உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம்பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்.


ஓமனிதன்
செய்கின்ற பாவங்களுக்கெல்லாம் கழுவாய் உண்டு; ஆனால், நன்றி கொன்ற பாவத்திற்கு மட்டும் கழுவாய் இல்லை. எனவே, கழுவாய் இல்லாத பாவம் ஒன்று உண்டேல், அது 'நன்றி மறத்தல்' என்ற பாவம் ஒன்றேயாகும். இதற்கு நேர் மறுதலையாக அமைந்த சிறந்த புண்ணியம் நன்றி மறவாமையாகும்.


இந்த உடம்பையும், உடம்பின் உறுப்புக்களையும் உள்ளுறை கருவி காரணங்களையும் தந்தவன் இறைவன். அந்த இறைவன் ஏன் தந்தான்? எதற்காகத் தந்தான்? எதன் பொருட்டுத் தந்தான்? தந்ததற்கான காரணம் என்ன? அப்படித்தந்த இறைவன் எங்குள்ளான்? அவனைக் கண்டவர் யார்? அவனைக் காண வழி யாது? என்பனவற்றை நாளும் சிந்தனை செய்ய வேண்டும். அவ்வாறு சிந்தனை செய்தவர்கள் தான், அடியார்களும் அருளாளர்களும், பக்திமான்களுமாவார். அவர்கள் வழியில் உடம்பெடுத்த நாமும் இதுபற்றி சிந்தனை செய்ய வேண்டும்.
கிருபானந்த வாரியார்
நன்றிகள் குருநாதர், கூகுல்

3000 அடி உயரத்தில் அன்னதானம் :-

மதுரை : சுயநலம் பெருகி வரும் இக் காலத்தில், பசியுடன் ஒருவர் கூட இவ்விடத்தை விட்டுச் செல்லக்கூடாது, என்ற உயர்வான சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றது காளிமுத்து சுவாமிகள் அன்னதான மடம்.இந்த மடம் அமைந்திருப்பது வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சதுரகிரி மலையில் தான். மூன்றாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயில் அருகில் 1976ல் காளிமுத்து சுவாமிகள் இந்த அன்னதான மடத்தை துவக்கினார். அது முதல் இன்று வரை தினமும் 3 வேளை இங்கு அன்னதானம் நடக்கிறது, என்பது தான் ஆச்சரியமான விஷயம்.காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுடச்சுட சோறு, சாம்பார், ரசம், கூட்டு, பாயாசம் அன்னதானம் வழங்கப்படுகிறது. சாதாரண நாட்கள், விசேஷ நாட்கள் என்ற பாகுபாடு இல்லை. இந்த மலையில் உள்ள கோயில்களுக்கு பகல், இரவு என எப்போதும் பக்தர்கள் வந்து செல்வர். பசித்து வருபவர்களுக்கு உணவு வழங்குவதை தலையாய கடமையாக கொண்டுள்ளனர். இரவு 8 மணிக்கு பின் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு சாப்பாடு இல்லை எனக் கூறாமல் உடனே அடுப்பை பற்றவைத்து உப்புமா கொடுத்து அவர்களின் பசியை போக்கி விடுகின்றனர்.



இந்த அன்னதான மடத்தில் 4 சமையல் மாஸ்டர்கள், 10 சப்ளையர்கள் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். தண்ணீரை தவிர அனைத்து பொருட்களையும் மலையில் கீழ் இருந்து சுமையாளர்கள் மூலம் எடுத்து வருகின்றனர். அன்னதானம் மட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இலவசமாக தங்க இடம், விரிப்பு மற்றும் பாய் கொடுக்கின்றனர். பக்தர்கள் விரும்பினால் மட்டும் காணிக்கை கொடுக்கலாம். "ஸ்ரீ காளிமுத்து சுவாமி சேரிட்டபிள் டிரஸ்ட்' மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த அன்னதான மடத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பக்தர்கள் எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் நாங்கள் அத்தனை பேருக்கும் உணவு கொடுப்போம். பக்தர்கள் அதிகம் வரவேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து சாப்பிடலாம். வரும் ஆடி அமாவாசை நாளில் லட்சம் பேருக்கு கூழ் வழங்க உள்ளோம்,'' என்றார். சதுரகிரியில் அன்னதானம் வழங்கும் பல மடங்கள் உள்ளன. இவை விசேஷ நாட்களில் மட்டுமே அன்னதானம் செய்கின்றன. உணவருந்த எங்கள் மடத்திற்கு வாருங்கள் என்ற அழைப்புகளை சதுரகிரியை தவிர வேறு எங்கும் கேட்க முடியாது, என்பது உண்மையே
நன்றிகள் குருநாதர், கூகுல்

பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது?


இது என்ன, இந்தக் கேள்வி  சின்னப் புள்ளத் தனமா  இல்லை இருக்கு  என்கிறீர்களா?
தமிழ் நாட்டை பொறுத்தவரையில் பகுத்தறிவு என்கிற வார்த்தையை பிரபலம் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தது பெரியார் தான்! ஆனால் அதற்க்கு மேலே பெரியார் என்ன செய்தார், பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது?

இந்து மதத்தின் மேலே சில பல மூட நம்பிக்கைகளை தூசியாகப் படிந்து இருந்தன.   பெரியார் அவற்றை சுட்டிக் காட்டி  பகுத்தறிவுவாதி என்று எளிதாக பெயர் எடுத்து விட்டார்.

கடவுள் இல்லை என்று சொல்வது எளிதான விடயம், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் கூட சொல்ல முடியும். நானும் சொல்ல முடியும்.

புத்தர் கூட கடவுளைப் பற்றிக் கவலைப் படாத, கடவுள் கோட்பாட்டை இக்னோர் செய்தவர்தான். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்க்கு விடிவு தேட முயற்சியும் செய்து அதற்க்கு ஒரு சொல்யூசனையும் கொடுத்து இருக்கிறார். புத்தர் அதற்காக கடுமையாக உழைத்தார். தன்னுடைய சுகங்களையும் துறந்தார். ஆதி சங்கரர் , சாக்ரடீஸ்போன்றவர்களும் அப்படியே.

ஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.

ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்? அதற்கு காரணம் என்ன? ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும், ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்?

உண்மையான பகுத்தறிவுவாதி மனித வாழ்க்கையின் போக்கு , அதன் காரணிகள் ஆகியவற்றை ஆராய்வான். மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.

சிறந்த பகுத்தறிவு வாதிகளான புத்தர், சாக்ரடீஸ், இயேசு, ஆதி சங்கரர், பட்டினத்தார், விவேகானந்தர்…. போன்றவர்கள அதைத்தான் செய்தனர்.

பகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.

இதை நாம் சொல்லுவது ஏன் என்றால்,  தமிழர்கள் பகுத்தறிவு என்றாலே அது பெரியார் சொன்னதுதான் என்கிற ரீதியிலே அரைத்த  மாவையே அரைத்துக் கொண்டுஒரு குட்டையிலே மூழ்கிக் கிடைக்காமல், சுதந்திர சிந்தனையாளர்களாக , இப்போதைய கால  கட்டத்திலே மக்களுக்கு தேவையான பகுத்தறிவு சிந்தனைகளை உருவாக்கவில்லை

நீண்ட அராய்ச்சி செய்து நான் இன்ன இன்ன வழிகளில் கடவுளை காண முயற்சி செய்தேன், அனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று தான் தேடிய வழிகளை சான்றுகளுடன் வெளியிட்டு சோதனையின் முடிவில் அப்படி ஒன்று இல்லை என்று கூறுவது உண்மை நாத்திகம்.கடவுளை பற்றி அப்படி எதுவும் ஆராய்ச்சிசெய்து கூறவில்லை

வெறுமனே கடவுள் இல்லை அதுவும் இந்து கடவுள் மட்டும் இல்லை மற்ற கடவுள் உண்டு என்று கூறுவது,பெரும் அபத்தம்.

பிள்ளையாரும்,ராமரும் பிறந்தது வட இந்தியாவில் அதனால் எதிர்க்கிறோம் என்பதும்,

வேறு நாட்டிலே பிறந்த மகான்கள் கண்ட மதத்தை மட்டும் ஒன்றும் சொல்லாமல் எதிர்க்காமல் நாதிகத்திலே பாரபட்சம் காட்டுவதும் எப்படிப்பட்ட நாத்திகம்.

எந்த தவறையும் வெளிப்படையாக செய்தால் அது சரி என்று ஆகிவிடாது.

இவரை தலைவர் இவர் கொள்கைகளே எங்கள் வாழ்க்கை என்று வாழும் நண்பர்கள் நம்மை நம் வழிபாட்டை இழித்துரைப்பதும் கேவலபடுத்துவதும் எந்த வகையில் நியாயம். அதுவும் இவர்கள் பின்பற்றும் தலைவரே சுய வாழ்வில் பல தவறுகளை செய்தவர்,பின்னர் ஏன் அவர் வால் பிடித்து அவரை தூக்கி நிறுத்திக்கொண்டு நம் கடவுள்களை வந்து சாடுகிறார்கள்?

பிற மதத்திற்கும் இந்துக்களுக்கும் மோதல் வர காரணமே இவர்கள் நம்மை கேவலமாக சித்தரிப்பதுதான்.ஏன் பாரதியார்,விவேகானந்தர்,ராமானுஜர் எல்லாம் செய்யாத சீர்திருத்தமா? அவர்களுக்கு இல்லாத முற்போக்கு சிந்தனையா?

பெரியார் பிறக்காத மாநிலங்கள் எல்லாம் இன்னும் பகுத்தறிவு பெறாமல் உள்ளதா? தீண்டாமை என்பது கொடிய நோய் அதற்கு குரல் கொடுத்த பல பெரியவர்களுள் இவரும் ஒருவர் என்பதை தவிர வேறு எந்த சிறப்பும் தெரிய வில்லை

இந்து நம்பிக்கைகளை அடியோடு ஒழிக்கவில்லை தேவையான திருத்தங்களை மட்டுமே செய்தார்கள். இந்து மதமே பகுத்தறிவான மதம்தான்,இதனை நீங்கள் மறுக்கிறீர்களா? நாமும் இங்கே உள்ள தவறான விசயங்ககளுக்கு வக்காலத்து வாங்கவில்லை.மனிதநேயமற்ற செயல்கள் எங்கு இருந்தாலும் நாம் அதனை எதிர்க்க வேண்டும். இவர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது மனித நேயமற்ற செயலாக உங்களுக்கு தெரியவில்லையா?

நன்றி: திருச்சிக்காரார்,
குருநாதர்