Tuesday 26 March 2013

அசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்!!!

அசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் அனைத்து உணவு விடுதிகளிலும் சோதனை நடத்தியதில் 100 கும் மேற்ப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். காடை கறிக்கு பதிலாக காக்கா கறியும் சில இறந்த நாய் களும் அக்க்கடைகளின் சோதனைகளில் சிக்கியுள்ளது. இது போல நமது ஊரிலும் அனைத்து  கடைகளிலும் சோதனை நடத்தினால் தான் தெரியும்...

காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிருஷ்ணன் கொரலா வரும்? என்பது ரன் படத்தில் விவேக் நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி, அதே போன்ற ஆனால் உண்மையான அதிர்ச்சியான தகவல்கள் தான் இது, நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.

அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை,
அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு.

1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”,

2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.

இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் :0 என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது, அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகழுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது)
அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் தெரியவில்லை)

அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.

இன்னும் பல எழுதமுடியும் மற்றொன்று முக்கிய செய்தி இது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஏன் வெளியெ சொல்வதில்லை அதுதான் தமிழரின் அற்புத குணங்களில் ஒன்று முகநூலிலும் இதர இணையத்திலும் தமிழனின் பெருமையை பார் என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவான், அந்த பொய்யை இரசிக்க ஆயிரம் சேர்களும் லைக்குகளும், ஆனால் உண்மையை பகிரமாட்டான் ஏன் தெரியுமா. அடுத்தவன் எக்கேடு கெட்டுப்போகட்டும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் (பேருந்தில் நிற்க முடியாத நிலையில் ஒரு முதியவர் இருக்கும் போது இரண்டு வயது குழந்தையை சீட்டில் உட்கார வைத்து இடம் கொடுக்க கூறினால் குழந்தைக்கு காய்ச்சலுங்க பெரியவர் என்ன அவசர வேலையாகவா போகிறார்) காலியாக வரும் பஸ்ஸில் ஏறவேன்டியது தானே என்று சொல்லும்............................
இதை(கெட்டுப்போன மாமிசம்) அரசு எந்த அளவிற்கு தடுக்க முடியும் என்றால் முடியாத காரியம் தான் ஊறிப்போன லஞ்ச பரிமாற்றம். அரசு திட்டமிட்டால் கீழே வர வர காணாமல் போகும். ஒரு நாள் நடவடிக்கை எடுத்தால் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து விடும் நாம் தான் இதை தடுத்து நிறுத்த முடியும் எப்படி உண்மையை எடுத்துக்கூறுங்கள் பலருக்கு தெரிவியுங்கள் கூட்டம் குறையும் போது தன்னாலேயே நல்ல பொருளை வாங்கி விற்க ஆரம்பிப்பார்கள், அப்போதுஅவர்களுக்கு துணிவு வரும் லஞ்சம் வாங்க வருபவர்களுக்கு பயப்பட தேவையில்லாமல் போகும் நல்ல மாற்றம் வரும்

அவசியமான மறுபதிவு:தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவம்

அவசியமான மறுபதிவு:தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவம்

உலகின் எந்த பகுதியைச் சார்ந்த குழந்தையாக இருந்தாலும் முதல் ஐந்துவருடங்கள்(பத்து வயதுவரையிலான ஆரம்பக்கல்வி) தாய்மொழியிலேயே கல்வி கற்கவேண்டும்.அதனால் தாய்மொழி பேச-எழுத அக்குழந்தைக்கு மிக எளிதாக இருக்கும்.ஆனால் நம் நாட்டில் தான் ஆரம்பக்கல்வி(நர்சரி & பிரைமரி) ஆங்கிலமயமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிதாக ஆங்கிலப் பயிற்றுமொழிப்பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் திறமையானவர்கள் கூட கல்வியைத் தொடரமுடியாமல் போகிறது.அப்படியே தேர்ச்சி பெற்று வரும் பலரும் தங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். 


சுவாரசியமான எடுத்துக்காட்டு ஒன்று அண்மையில் வெளியானது.இந்தியாவில் மத்திய அரசுப்பணியாளர் ஆணையத்தின்(யு.பி.எஸ்.சி) அய்.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொண்ட மங்கள்பாண்டே என்பவர் “இந்தியப்பசு”என்ற தலைப்பில் ஒரு கட்டுரைஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.அதிலிருந்து சில வரிகள்:

அவன் ஒரு பசு.பசு ஒரு வெற்றிகரமான விலங்கு.மேலும் அவன் நாலுகால் உள்ளவன்.அவன் ஒரு பெண் என்பதால் அவன் பால் கொடுக்கிறான்.அவனுக்கு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நான்கு குழாய் வழியாக பால் வருகிறது.அவனுக்கு வாலும் உள்ளது.அது புறக்கடையில் உள்ளது.அதன் மறுமுனையின் மறுபக்கத்தில் அவனது ஒட்டிக்கொள்ளும் உடம்பில் இறங்கும் ஈக்களை பயமுறுத்த அவன் அதால் அடிப்பான்.(இது மகேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

மகேஷ்பாண்டேயைக் குறை கூறமுடியுமா?சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் அந்நிய போதனா மொழியில் கல்வித்திட்டத்தைத் திணித்தவர்களிடம் தான் குறை இருக்கிறது.ஆங்கிலம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.அப்படியானால் இஸ்ரேல்,ஜப்பான்,எகிப்து,கிரீஸ்,சீனா,இத்தாலி,ஜெர்மனி, பிரான்ஸ்,போர்ச்சுகல் போன்றவை முன்னேறியது எப்படி? அவர்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை.ஆனால் எந்த வகையில் பின்தங்கிவிட்டார்கள்.

ஆங்கில மொழிக்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.நம் கல்வித்துறை அமைச்சர் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

1.ஹிந்திபேசும் மாநிலங்கள் ஒன்பது உள்ளன.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகத்திலாவது இயற்பியல், வேதியியல்,தகவல் தொழில்நுட்பம்,நிர்வாகவியல்,சட்டம்,வரலாறு,புவியியல் போன்ற அனைத்துத்துறைப் பாடங்களையும் இந்திய மொழிகளிலேயே கற்பிக்க வேண்டும்.அந்த மாநிலங்களின் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஹிந்தி தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பிக்க வேண்டும்.

2.ஹிந்தி பேசாத மாநிலங்களில் கற்பிக்கும் மொழி ஆங்கிலத்திற்குப்பதிலாக அம்மாநில மொழியாக இருக்க வேண்டும்.அத்துடன் ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.
3.அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான (தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரையில்) வார்த்தைகள் இருக்கட்டும்.

இதைச் செய்தால் பல நவீனத்திறமைகள் வெளிப்படும்.

ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டைக்காண்போம்:

நவீன்குமார் என்ற திருச்சூரைச்சேர்ந்த(கேரளா) இளைஞன் மேல்நிலைப் படிப்பை தாய்மொழியாம் மலையாளத்தில் பயின்று பின்பு பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் விட்டுவிட்டான்.
ஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடும்முயற்சிக்குப்பின் பாட்டரியிலிருந்து தொடர்ந்து மின்சக்தி பெறும் முறையை கண்டுபிடித்துள்ளான்.ஒருவீட்டின் எல்லா மின்சாரத்தேவைகளையும் நிறைவு செய்யும் ஜெனரேட்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளான் என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.இம்முறையைப் பயன்படுத்தி பேருந்து,கார்,ஆட்டோ ஆகியவற்றை மறுவூட்டம்(ரீ சார்ஜ்) செய்யாமல் நீண்ட தூரம் ஓட்டிச்செல்ல முடியும்.

ஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கம் 18-19,டிசம்பர் 2008

குமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு!!!

கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி அல்லது மஞ்சள் ஆடை அணிந்து,கையில் விசிறியோடு அந்த மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி,திற்பரப்பு,திருநந்திக்கரை,பொன்மனை,பன்றிப்பாகம்,கல்குளம்,மேலாங்கோடு,திருவிடைக்கோடு,திருவிதாங்கோடு,திருப்பன்றிக்கோடு,    திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்று சிவபிரானைத் தரிசிக்கிறார்கள்.
இங்ஙனம் பனிரெண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம்’ எனப்படுகிறது.இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 87 கி.மீ!!!
ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள்.
ஹரியும் சிவனும் ஒண்ணு;என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம் என்பர்.ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருகிறது.
இதன் பின்னே ஒரு புராணக்கதை உண்டு.
இடுப்புக்கு மேலே மனித வடிவமும்,கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம்.சிவபக்தரான வ்யாக்ரபாத மஹரிஷியே புருஷாமிருகம் ஆனதாகச் செய்தி உண்டு.புருஷாமிருகம் விஷ்ணுநாமத்தைக் கேட்க விரும்பாத ஒரு விநோத ஜந்து!!!
தர்மர் ஒருமுறை ராஜஸீய யாகம் நடத்தத் திட்டமிட்டார்.யாகத்திற்கு புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டது;பீமனை இந்தப் பாலைக் கொண்டு வருமாறு பணித்தார் தர்மர்.
பீமனிடம் பனிரெண்டு ருத்ராட்சக் கொட்டைகளைத் தந்து புருஷாமிருகம் தாக்க வந்தால் அந்த ருத்ராட்சக்கொட்டையை மிருகத்தை நோக்கி வீசி எறியும்படி கூறினார் ஸ்ரீகிருஷ்ணர்.
வீசி எறியப்படும் ருத்ராட்சம் கீழே விழும் இடத்தில் சிவலிங்கம் ஒன்று தோன்றும்;லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்கத் தொடங்கிவிடும்.
ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பனிரெண்டு ருத்ராட்சக்கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன்.
திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கித் தவம் புரிந்துகொண்டிருந்தது புருஷாமிருகம்.
பீமன், கோவிந்தா,கோபாலா என்று உரக்கக் கூறினான்.புருஷாமிருகத்தின் தவம் கலைந்தது;அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது;உடனே,பீமன் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட்டான்;அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது;
சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது;பீமன் கோவிந்தா,கோபாலா என்று மீண்டும் கத்தினான்;புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த ஆரம்பித்தது;
பீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட்டான்;அது உடனே சிவலிங்கமாக மாறியது;இந்த இடமே திக்குறிச்சி.
இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பனிரெண்டாவது இடத்தில் (திருநட்டாலம்) ருத்ராட்சத்தை எறிய விடாமல் புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது.
அந்த நேரத்தில் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர் பீமனுக்கும்,புருஷாமிருகத்துக்கும் “ஹரியும் சிவனும் ஒன்றே”என்ற தத்துவத்தை உணர்த்தினார்.
இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர்.தர்மரின் யாகத்திற்கு பால் தந்து உதவியது புருஷாமிருகம்.
பீமன் ருத்ராட்சங்களை வீசி எறிந்த இடங்களே கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு சிவாலயங்கள் ஆகும்.மஹாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் க்ருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிவார்கள்;அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள்;சிவராத்திரிக்கு முன் தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்;
“கோவிந்தா,கோபாலா” என்று கோஷமிட்டபடி திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்குவார்கள்;அந்தத் தொடர் ஓட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்;சிவாலயங்களை தரிசிக்க ஓடுபவர்கள், கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணுநாமம் சொல்லி ஓடுவது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு.இதைத் தவிர,வேறு ஒரு கதையும் உண்டு;ஒரு அரக்கனுக்குப் பயந்து சிவபெருமான் இந்த பனிரெண்டு சிவாலயங்களுக்கும் ஓடிப்போய் மறைந்து நிற்பாராம்;இது சைவத்தை அவமதிக்கும் விதமாக இடையில் உண்டான இடைச்செருகல்.
ஆதாரம்:ஹிந்து விழாக்களும்,விரதங்களும் பக்கம் 178,179,180
ஓம்சிவசிவஓம்.

தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்!!!





ஒவ்வொருவரும்  தினமும் ஏழுமணி நேரம் தூங்க வேண்டும்;இதை விடவும் குறைவான மணிநேரம் தூங்கினால் மனமும்,உடலும் விரைவில் களைத்துப்போகும்;அதைவிடவும் அதிகமான நேரம் தூங்கினால்,சோம்பேறித்தனத்தை நாம் வரவேற்கிறோம் என்று பொருள்.(நோயாளிகளுக்கும்,குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் இது பொருந்தாது)/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அடுத்தவரை மனம் நோக வைத்தோ,அழ வைத்தோ,நமது அறிவாற்றலால் ஏமாற்றியோ அல்லது அதிகாரத்தைக் கொண்டு மிரட்டியோ பணம் சம்பாதிக்கக் கூடாது;அப்படி சம்பாதிக்கும் பணம் பெருமளவு சேர்ந்ததும்,பதினைந்து ஆண்டுகளுக்குள் மொத்தமாக காணாமல் போய்விடும்;நாம் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டோம் என்று முதுமையை வரவேற்கும்போது,இவ்வாறு சம்பாதித்தவர்களை வறுமை இறுக அணைத்துக் கொள்ளும்.
சட்டத்துக்குப்புறம்பாகவோ,தர்மத்துக்குப் புறம்பாகவோ பணம் குவித்தாலும்,அத்துடன் தீராத கர்ம நோயும் வந்துவிடும்;இப்படிப்பட்டவர்களுக்கு மிக நெருங்கிய நட்புவட்டாரத்தில் இவர்களின் கர்மநோயை குணப்படுத்தும் மருத்துவர்,முலிகை மருத்துவம் அல்லது மருந்துகள் இருக்கும்;ஆனால்,அதை ஒருபோதும் நாம் அறிய முடியாது;அல்லது நம்பமாட்டோம்;

ராகு மஹாதிசையில் அபூர்வமான ராகு மஹாதிசையும்,தர்மகர்மாதிபதி திசையும்,யோகம் தரும் கிரகத்தின் திசையும் ஒருவரது பிறந்த ஜாதகப்படி அல்லது அவரது மகன்/ள் பிறந்த ஜாதகப்படியோ வந்தால் அவர்கள் குறுகிய காலத்தில் பெரும் செல்வச் செழிப்பை அடைந்துவிடுவார்கள்.அப்படிப்பட்ட செல்வச் செழிப்பு மட்டுமே நிலைக்கும்.யோகம் தரும் சனி மஹாதிசை வந்தால்,நிரந்தரமான சொத்துக்களை வாங்க வைக்கும்;அந்த சொத்துக்களை மூன்று தலைமுறைகள் வரை அடமானம் கூட வைக்கமுடியாது;இதையெல்லாம் அனுபவம் மிக்க ஜோதிடர்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நமது குழந்தையின் ஏழு வயதுக்குள் அடிக்கடி கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;சனி,ஞாயிறு,அரசு விடுமுறைகள்,உள்ளூர் விடுமுறைகளில் தொடர்ந்து நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்;ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளின் வரலாற்றையும்,வழிபடும் முறையையும் சொல்லித் தர வேண்டும்;இப்படிச் சொல்வதை எப்படி ஏழுக்குட்பட்ட வயதுடைய குழந்தை புரிந்துகொள்ளும்? நமது புரிந்துகொள்ளும் திறனை விடவும் அதற்கு புரிந்து கொள்ளும் திறன் அதிகம்;(அது புரிந்து கொண்டதை நம்மால் அதன் டீன் ஏஜில் தான் அறிந்து கொள்ளவே முடியும்)முடிந்தவரையிலும் எளிய தமிழில் சொல்லி விளக்கினால் போதும்;அது கேட்கும் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொல்லிப் பழக வேண்டும்;அது கேட்கும் கேள்விகள் நமது ஆன்மீக அறிவை விசாலமாக்கிவிடும்!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நம்மில் பலர் தொடர்ந்து கோவில்,சித்தர்வழிபாடு,தியானம்,அன்னதானம் என்றெல்லாம் தொடர்ந்து ஏதாவது மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ பின்பற்றிக்கொண்டே இருப்பார்கள்;ஆனால்,அவர்களின் வாழ்வில் ஒருசிறு முன்னேற்றமும் இராது;இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களின் பிறந்த ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கும்;அல்லது முன்னோர்களின் சாபம் இருக்கும்;அதைக் கண்டறிந்து அதற்குரிய பூஜைகளையும்,பரிகாரங்களையும் செய்யாதவரையில் ஒரு இஞ்ச் கூட வாழ்வில் உயர முடியாது;இப்படிப்பட்டவர்கள் ஒரே ஒரு சித்தர் அல்லது ஒரே ஒரு தெய்வ வழிபாட்டில் அளவுகடந்த வெறியுடன்/ஈடுபாட்டை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தபோது உணர முடிந்தது;

அல்லது

தனது வாழ்க்கைத் துணையைத் தவிர,வேறு ஒரு துணையோடும் வாழ்ந்து வருவார்கள்:அல்லது பணம் கொடுத்து சுகம் வாங்கும் சுபாவம் இவர்களுக்கு இருக்கும்;இப்படிப்பட்டவர்களுக்கு இறைவழிபாட்டுக்கான பலன்கள் வந்து சேரும்;ஆனால்,நிலைக்காது;ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் உறுதியாக இல்லாத வரை இந்த துரதிஷ்டம் தொடரத் தான் செய்யும்.. . . .. ###############################################################
நாம் செய்யும் பரிகாரபூஜைகளைப் பற்றியும்,செய்ய இருக்கும் தானங்களைப்பற்றியும் எவரிடமும்,எப்போதும் தம்பட்டம் அடிக்கக்கூடாது;இவைகளைச் செய்தப்பின்னரும்,வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தால் தான் முழுப்பலன்களும் நம்மை வந்து சேரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


தூங்கி எழுந்திருக்கும் வேளையில் கண்விழித்த உடனே நமது வலது கையை நோக்க வேண்டும்;அவ்வாறு நோக்கும்போது ஏதாவது ஒரு இறைவனை நினைக்க வேண்டும்;எல்லோருக்கும் ஏற்ற இறைவன் அருணாச்சலேஸ்வரரே!
 ஓம் அருணாச்சலாய நமஹ;ஓம் அஷ்டபைரவப் பெருமான்களே நமஹ என்று மூன்று முறை நினைத்துவிட்டு,படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.படுக்கையை விட்டு எழுந்ததும்,நமது வீட்டின் சுவற்றை உற்று நோக்க வேண்டும்;அப்படி உற்று நோக்குமிடத்தில் ஓடும் குதிரைகள் படத்தை ஒட்டியிருக்க வேண்டும்;குறிப்பாக கும்பலாக ஓடும் வெள்ளைக்குதிரைகள் படம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்;இப்படி ஒருநிமிடம் வரை உற்று நோக்கிக் கொண்டே வந்தால்,நம்மைப் போல சுறுசுறுப்பாக வேறு யாரும் அன்று தினசரிக்கடமைகளைச் செய்ய முடியாது;

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
பல் துலக்கிட இன்று பலவிதமான பற்பசைகள் சந்தையில் கிடைக்கின்றன;அவை அனைத்தும் நமக்குத் தொண்டைப்புற்றுநோயை உருவாக்குபவை;சில இனிப்பு பற்பசைகளும் கிடைக்கின்றன;அவை நமது பற்களின் வலிமையை வெகுசீக்கிரமே நிர்மூலமாக்குபவை;எனவே,பற்பசைகளை ஒதுக்கிவிட்டு பற்பொடிகளைப் பயன்படுத்துவதே நமது நீண்டகால ஆரோக்கியத்துக்கு உகந்தது;கிராமங்களில் இருப்பவர்கள் அடுப்புக்கரி(இருக்குமா?) அல்லது வேப்பங்குச்சி,ஆலங்குச்சி,அரசங்குச்சியைப் பயன்படுத்துவது நல்லது;உள்ளூர் தயாரிப்புகள் நமது பற்களை பத்திரமாக பாதுகாப்பவை;நாமோ அதிகவிலையுள்ளவையே ஆரோக்கியம் தரும் என்ற மேல்நாட்டு மாயையில் இருக்கிறோம்;டிவி விளம்பரங்களும் நம்மை அடிமுட்டாளாக்குகின்றன;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பிறந்தது முதல் இறக்கும் நாள் வரையிலும் இடுப்பில் அரைஞாண் கயிறு ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் கட்டியிருக்க வேண்டும்;இது குடலிறக்க நோயை வராமல் தடுக்கக் கூடியது;அரைஞாண் கயிறு கட்டாமல் இருந்து,ஆவேசமாக தாம்பத்தியம் செய்வதால் தான் குடலிறக்க நோய் உண்டாகிறது;எத்தனை முறை இந்த அரைஞாண் கயிறு அறுந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்குள் புதிதாகக் கட்டுவது அவசியம்;ஒருபோதும் இது இல்லாமல் இருக்கக் கூடாது;அரைஞாண்  கயிறு சிகப்பு நிறத்தில் இருப்பது மிகவும் அவசியம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இதே போலத்தான் ருத்ராட்சமும்! பள்ளி/கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவியர் மட்டும் ஆறுமுக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வது அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்;மற்ற அனைவரும் ஐந்துமுக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது அவசியம்;கழுத்தில் கட்டப்படும் ருத்ராட்சம் நமது(ஆண்கள்) தொண்டைக்குழியில் இருக்குமாறு சிகப்புக் கயிற்றில் மட்டும் கட்ட வேண்டும்;இறக்கும் நாள் வரையிலும் ஒருபோதும் இதைக் கழற்றிவிடக் கூடாது;கயிறு நைந்து போனாலோ,அறுந்து போனாலோ அதிகபட்சமாக ஏழு நாட்களுக்குள் புதுக்கயிற்றில் கட்டிவிட வேண்டும்;நீங்கள் ருத்ராட்சம் கட்டினால் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைக் கேலி செய்யத்தான் செய்வார்கள்;பிறகு,அட்வைஸ் செய்வார்கள்;பல பிறவிகளாக சிவவழிபாடு செய்தால் மட்டுமே இப்பிறவியில் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்;பெண்களும் அணியலாம்;மணமானவர்கள்,தாலிக்கொடியோடு சேர்த்துக் கொள்ளலாம்;மாதவிலக்கிற்கும் இதை அணிவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை;தாம்பத்தியத்திற்கும் இதை அணிந்திருப்பதற்கும் தீட்டு கிடையாது;
ருத்ராட்சங்களைக் கொண்ட மாலைகள் இருக்கின்றன;ஒரு ருத்ராட்ச மாலையில் 12,21,51,108 என்ற எண்ணிக்கையில் இருக்கும் ருத்ராட்சமாலைகளில் ஏதாவது ஒன்று அணியவே பலவிதமான சிவநெறிகளை நாம் பின்பற்ற வேண்டும்;குளிக்கும்போதும்,டாய்லெட் போகும்போதும்,தாம்பத்தியத்தின் போதும்,மது சிகரெட் பழக்கத்தின்போதும் கழற்றி வைக்கவே நேரம் போதாது;

ருத்ராட்சம் அணிந்தப்பின்னர்,அசைவம் சாப்பிடக்கூடாது;ருத்ராட்சம் அணிந்தவரை நோக்கி மாந்திரீக ஏவல் ஏவினால் அது செயலிழந்து போகும்;பேய் ,பிசாசு அண்டாது;துர்தேவதைகள் நெருங்காது;
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒருபோதும் நிர்வாணமாகக் குளிக்கக் கூடாது;தூங்கக்கூடாது;நிர்வாணமாகப் படுத்துக் கொண்டு போர்வையை போர்த்திக் கொண்டும் தூங்கக் கூடாது;வெட்டவெளியில் பகலிலோ/இரவிலோ தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது;அவ்வாறு செய்தால் நிச்சயம் துஷ்டசக்திகள் நமது உடலுக்குள் புகுந்துவிடும்;அப்படிப் புகுந்ததை நம்மால் உணர முடியாது;தாம்பத்திய உறவு முடிந்ததும்,கண்டிப்பாக(குறைந்தது பதினைந்து நிமிடம் கழித்து) குளிக்க வேண்டும்;

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பெண்கள் தொப்புளிலும் மருதாணி என்ற மெஹந்தியை இட்டுக் கொள்வது அவசியம்;இதனால்,துர் ஆவிகள் உடலுக்குள் புகாமல் தடுக்கப்படும்;ஒட்டியாணம் அணிவதும் ஆவிகள் தொப்புள் வழியாக உடலுக்குள் தடுக்கவே!!!


உடல் அதிகப்படியான உஷ்ணம் இருந்தால்,தொப்புள் மீது சிறிது விளக்கெண்ணையைத் தடவினால்,சிறிது நேரத்திலேயே உடல் குளிர்ந்துவிடும்;இதெல்லாம் பாட்டி வைத்தியம் என்பதை அறியக்கூட நமக்கு நேரமில்லை;எதை நோக்கி ஓடுகிறோம் என்றே தெரியவில்லை;
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
நாம் ஒவ்வொருவருமே குளிக்கச் சென்றதும்,நமது உடலின் முன்பக்கத்தில் இருக்கும் மஹாலட்சுமியும்,பின்பக்கத்தில் இருக்கும் மூதேவியும் நம்மை விட்டு வெளியேறுகிறார்கள்;எனவே,குளித்து முடித்ததும்,நாம் முதலில் துவட்ட வேண்டிய உடல்பாகம் முதுகு! இவ்வாறு செய்யாமல் உடலில் வேறு எதாவது ஒருபகுதியை துவட்டினால் அங்கே மூதேவி புகுந்துகொள்வாள்;இதனாலும்,நம்மில் பலருக்கு பலவிதமான உடல் சோர்வுகள்,மனப்பதட்டங்கள் உருவாகின்றன;பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இதை நமது முன்னோர்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சகுன சாஸ்திரம் தமிழர்களுக்கே உரியது;ஒரு நல்ல காரியத்துக்கு நமது இருப்பிடத்திலிருந்து புறப்படுகிறோம்;அப்போது விதவை,ஒற்றைப் பிராமணன்,விறகு,விறகு மூட்டை,பூனை போன்றவை எதிர்ப்பட்டால் அதை கெட்ட சகுனமாகக் கருதுகிறோம்;நாம் புறப்படும் இடத்தில் இருந்து நூறு மீட்டர்களுக்குள் இவைகளில் ஏதாவது ஒன்று எதிர்ப்பட்டால் மட்டுமே சகுனத்தடை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்;அதற்குப் பிறகு,வந்தால் அது சகுனத்தடை அல்ல;கன்னிப்பெண்,கர்ப்பிணிப்பெண்,ஒன்றுக்கும் மேற்பட்ட பிராமணர்கள்,இல்லத்தரசி,நித்தியசுமங்கலி,ஒரே ஒரு ஆசிரியர்/ஆசிரியை, வங்கியில் பணிபுரிவோர்,ஒரு பூசாரி,ஒரு ஜோதிடர்,ஒரு அருள்வாக்கு சொல்பவர்,ஒரு குறி சொல்பவர்,சாமியாடிகளில் ஒரே ஒருவர், பணத்தைப் பொருளாகக் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிவோர் எதிர்ப்பட்டால் அது சகுன லாபம் என்று எடுத்துக் கொள்ளலாம்;இதுவும் அதே நூறு மீட்டர்களுக்குள் வந்தால் மட்டுமே சகுன லாபம் என்று கருத வேண்டும்;
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வீடு ஒரே ஒரு அறையாக இருந்தாலும் சரி;ஒன்றுக்கும் மேற்பட்ட அறைகளுடன் இருந்தாலும் சரி! வீட்டிற்குள் நுழையும் போது நறுமணம் கமழ வேண்டும்;துர்நாற்றம் வீசக் கூடாது;வீட்டிற்குள் ஆடைகள்,புத்தகங்கள்,பொருட்கள் அலங்கோலமாக சிதறிக்கிடக்கக்  கூடாது;அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்;அவ்வாறு இந்தால் மட்டுமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் அருள் நமக்குக் கிட்டும்;
துணிதுவைப்பதற்காக ஆடைகளை ஊற வைத்தால் அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்குள் துவைத்து காயப்போட்டுவிட வேண்டும்;இல்லாவிட்டால்,ஒருபோதும் வீட்டில் பணம் தங்காது;தினசரிச் செலவுக்கே திண்டாட வேண்டியிருக்கும்;

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

தினமும் ஒவ்வொருவரும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆரோக்கியக்குறிப்புகளில் ஒன்று.இரவு மட்டுமல்ல;மூன்று வேளைகளும் சாப்பாடு சாப்பிடும் முன்பு ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு சாப்பிடுவது நன்று;மதிய உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்;டிவி விளம்பரங்கள் மூலமாக பிரபலமாகிவரும் பன்னாட்டு குளிர்பானங்களை & உணவுவகைகளை ஒருபோதும் அருந்தாதீர்கள்;அமெரிக்க உணவு வகைகள்,எம்.எல்.எம்மில் பிரபலமடையும் உணவு/மூலிகை உணவுகளை விடவும் சக்தி வாய்ந்த உணவு & மூலிகை உணவுகள் நமது நாட்டில் கிடைக்கின்றன;
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிறு நகரங்களிலும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசி,காய்கறிகள்,தானியங்கள்,பயிறுவகைகள் பிரபலமாகி வருகின்றன;இவைகள் சாப்பிடும்போது ருசியின்றி இருக்கலாம்;இருந்தாலும் இந்த உணவுகளைச் சாப்பிடப் பழகிக்கொள்வதன் மூலமாக ஆரம்ப நிலையில் இருக்கும் நோய்கள் நிரந்தரமாக குணமாகிவிடும்;முற்றிய நிலையில் இருக்கும் நோய்கள் தனது வலிமையை இழந்து ஆரோக்கியத்தைப் பெறலாம்;இவைகளின் விலை கொஞ்சம் அதிகம் தான்;இருப்பினும்,டாக்டருக்குச் செல்வழிப்பதற்குப் பதிலாக உணவுக்குச் செலவழிக்கலாம்;இணையத்தில் ஆர்கானிக் ஃபுட்(Organic Food in your City) என்று தேடிப்பார்த்தால் முகவரிகள் கிடைக்கும்;கடைகள் வைக்காத தனி மனிதர்களை தீர விசாரித்து முன்பணம் தருவது நல்லது;
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எப்போதும் சாப்பிடும்போது போனிலோ/நேரிலோ பேசவேக் கூடாது;அது நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கவிடாமல் செய்து விடும்;சாப்பிடும் போதும்,சாப்பிட்ட உடனேயும் தண்ணீர் அருந்தவேக்  கூடாது;அசைவ உணவுகளில் சகிக்க முடியாத கெட்டுப்போன அசைவங்கள் (ஒரு ஆட்டின் கறி அளவுக்கு ஒரு குதிரையின் கறி அளவு அல்லது இறந்த எல்லா மிருகங்களின் . . .உவ்வே!?!?!??)சேர்ப்பது எங்கும் நடக்கிறது;எனவே,அதை நிரந்தரமாகக் கைவிடுவது அவசியம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நாம் குருவாக ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு நம் மேல் திருப்தி வராத வரைக்கும் தெய்வத்தின் கடாட்சம் கிடையவே கிடையாது;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பணத்தை நோக்கமாகக் கொண்டு வேலை செய்தால்(பன்னாட்டு நிறுவனங்களின் பேராசையைப் போல) மனம் உலக விவகாரங்களில் ஆழ்ந்துவிடுகிறது;ஆகவே,உலகியல் காரியங்களை மிகவும் கவனத்துடன் பகவானுடைய ப்ரீதிக்காகவே செய்ய வேண்டும்;இவ்விதமான செயல்களையும் கூட அதிக அளவில் செய்யக் கூடாது;ஏனெனில்,வேலைகள் அதிகமாவதால் நோக்கத்திலும் மாறுதல் ஏற்பட்டுவிடுகிறது.உலகமயமாக்கலினால் ஜி.8 நாடுகள் வெகுவிரைவில் அழிவுகளை சந்திக்க இருக்கின்றன;

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்றைய பெண்கள் தோடு,மூக்குத்தி,மோதிரம்,வளையல்,திருமாங்கல்யம் தவிர இதர நகைகள் அணியும் முறையே மறைந்துவிட்டது;இதனால்,குடும்ப அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவருகிறது.இனி, யாரும் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள்;இன்னும் 300 ஆண்டுகளில் நவக்கிரகங்களின் செயல்பாடுகள் நின்றுவிடும் என்று வீரப்பிரம்மம் அவர்கள் கணித்துள்ளார்;அதை நோக்கியே கலியுகம் நகர்கின்றது;இன்னும் 500 ஆண்டுகளுக்குள்ளேயே கலியுகம் (அரிதாக) நிறைவடைந்துவிடும்;ஒவ்வொரு நூறு ஆண்டுகளிலும் மனித இனத்தில் உருவாக வேண்டிய மாற்றம் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் மாறி வருவதை அவரது தீர்க்கதரிசனங்கள் உணர்த்துகின்றன;
#################################################################################
கும்கி படத்தில் ஐயய்யய்யோ ஆனந்தமே என்று ஒரு பாடலை வைத்துள்ளார்கள்;இந்த பாடல் பிரபலமாகிவிட்டது;பலர் இதை தனது செல் போனில் ரிங்டோனாக வேறு வைத்துள்ளார்கள்;மனிதர்களின் ஆயுளை முடித்து,அவர்களின் உயிரை எடுப்பவர் எமதர்ம ராஜா.இவர் சனிபகவானின் சகோதரர் ஆவர்.இந்த எமதர்ம ராஜாவின் மனைவியின் பெயர் ஐயோ! அடிக்கடி ஐயய்யய்யோ என்ற பாடலை செல்போனிலும்,டிவி சானல்களிலும் ஒலி/ஒளிபரப்பிக் கொண்டே இருக்க எமதர்மராஜாவின் மனைவி பூமிக்கு வந்துவிடப்போகிறாள்;எமதர்மராஜாவின் மனைவி வந்தால் கூடவே எமதர்மராஜாவும் வந்துவிடுவார்;இது போன்ற அசுபமான வார்த்தைகளில் பாடல்கள் எழுதாமல் இருப்பார்களா?


இந்தப் பாடலை ரிங்டோனாக வைத்திருப்பவர்கள் நிறைய்ய கஷ்டங்களையும்,காரியத்தடைகளையும் அனுபவித்து வருகிறார்கள்;வேண்டுமெனில்,இதை ரிங்டோனாக வைத்து டெஸ்ட் செய்து பாருங்களேன்!(இதை வைத்திருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,கடக ராசியினர் அதிகம் கஷ்டப்படுவதை உணரமுடிந்திருக்கிறது)
********************************************************************************
நெருங்கிய உறவுகள் மரணமடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்;அப்போது அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நமது வழிபாடு தடைபடும்.அப்போது நாம் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்கள்:-


நம்மை உருவாக்கியவர்கள் நம்மை விட்டு மறைந்தால்,ஒரு மாதம் வரையிலும் மந்திரஜபம்,இறைவழிபாடு,வீட்டில் இறைவழிபாடு செய்யக் கூடாது;31 ஆம் நாளன்று அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்று ஒரு அருகம்புல் மாலை வாங்கி,அவருக்கு அணிவிக்க வேண்டும்;அவரை ஒன்பது சுற்று சுற்றி வந்துவிட்டு,ஒன்பதுமுறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு,நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்;இதைச் செய்தப் பின்னர்,நமது வழக்கமான வழிபாடுகளைச் செய்யலாம்;


இவர்களைத் தவிர,மற்றவர்கள் மறைந்து,அந்த துக்கத்தில் கலந்து கொண்டால்,இரண்டுவிதமான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது;இறந்தவரை அவரது இருப்பிடத்திலிருந்து அகற்றும் முன்பே கலந்து  கொண்டால் பதினாறு நாட்கள் வரையிலும்,அகற்றியப் பின்னர் கலந்து கொண்டால்(அன்றே கலந்துகொண்டாலும்) ஐந்து நாட்கள் வரையிலும் இறைவழிபாட்டை விலக்க வேண்டும்;



இதுவே ஒரு புதிய ஜனனம் நிகழ்ந்து அந்த ஜனனத்தை அன்றே சென்று பார்த்தால் ஐந்து நாட்கள் இறைவழிபாட்டிற்கு விடுப்பு விட வேண்டும்;ஜனித்ததில் இருந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு  சென்று பார்த்தால் இரண்டு நாட்கள் மட்டும் விடுப்பு விட்டால் போதும்;ருதுவான வீட்டிற்கு அன்றே சென்றால் மூன்று வாரங்கள் இறைவழிபாட்டைத் தவிர்க்க வேண்டும்;ஒரு மாதம் கழித்துச் சென்று கலந்து கொண்டால்,அதற்கு எந்தவித இறைவழிபாட்டு விடுமுறையும் இல்லை;
ஓம்சிவசிவஓம்

வெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!

நமது ஆன்மீக  குரு திரு.சகஸ்ரவடுகர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இதுவரை சுமாராக ஆயிரம் ஆத்மாக்களின் கர்மவினைகள் தீர ஆன்மீக வழிகாட்டுதல் செய்து அனைவருக்கும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து  தொடர்ந்து ஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும்  என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும்? என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)


இந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;


(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)


இதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.


27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை பவுர்ணமியும் புதன் கிழமையும் சேர்ந்து வருவதால் இந்த புதன் கிழமை மிகவும் சக்தி வாய்ந்த பைரவ புதனாக இருக்கப் போகிறது;பிரார்த்தனை செய்து உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்;கடன்களை அடைத்துக் கொள்ளுங்கள்;நீண்டகால (நியாயமான) லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் (அந்தந்த நாடுகளில் இதே நேரத்தைப் பின்பற்றுங்கள்;அதுதான் சரி)
                                                            கடந்த ஆறு புதன்கிழமைகளில் ஏதாவது ஒரே ஒரு புதன் கிழமையன்று மட்டும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்குச் சென்று முறைப்படி வழிபட்டவர்களும்;ஒன்றுக்கும் மேற்பட்ட புதன்கிழமைகள் வழிபட்டவர்களுக்கும் ஏராளமான நற்பலன்கள் கிடைத்துவருகின்றன;தியான தீட்சைகளை பலவிதமான ஆன்மீக பயிற்சி அமைப்புகள் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றன;அவைகளில் ஏதாவது ஒன்றில் தீட்சை எடுத்தவர்கள்,இந்த புதன்கிழமைகளில் ஏதாவது ஒரு புதன் கிழமையன்று ஸ்ரீகால பைரவரை வழிபடச் சென்றிருக்கின்றனர்;அருள் வாக்கு சொல்பவர்கள்,தனது முற்பிறவிகளால் தவ ஆற்றலை இயற்கையாகவே பெற்றவர்கள் என பலரும் ஸ்ரீகாலபைரவரை வழிபடச் சென்ற போது,பலருக்கு பல்வேறு விதங்களில் ஸ்ரீகால பைரவர் காட்சியளித்திருக்கிறார்;பலருக்கு அவர்களுடைய கடன்கள் தீர சந்தர்ப்பம் அமைந்துவிட்டது;                            யாரெல்லாம் அடுத்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்களோ அவர்களுக்கு அந்த பிரார்த்தனை உடனே நிறைவேறியிருக்கிறது.உங்களில் யாருக்கெல்லாம் இது போன்ற அனுபவங்கள் கிடைத்தனவோ அவைகளை எமது மின் அஞ்சல் முகவரிக்கு aanmeegaexpress@gmail.com அனுப்பினால் அதற்கான விளக்கங்கள் பதிலாக அனுப்பி வைக்கப்படும்;                        ஓம்சிவசிவஓம்

Tuesday 19 March 2013

ஓம்சிவசிவஓம் ஜபித்தவர்களுக்கு கிடைத்துவரும் அனுபவங்கள்

OMSHIVASHIVAOM EXPERIENCE


பல வாரங்களாக ஓம்சிவசிவஓம் ஜபித்துவருபவர்களின் அனுபவங்கள் எமக்கு மின் அஞ்சல்களாகவும்,போனிலும் கிடைத்துவருகின்றன.ஆனால்,அவைகளை நமது தளத்தில் வெளியிட முடியாத அளவுக்கு மிகவும் உயர்வான அனுபவங்களாகவும்,தெய்வீக உணர்வுகளின் வெளிப்பாடுகளாகவும் இருக்கின்றன.இதற்கு மேல் அவைகளை விவரிக்க இயலவில்லை;இருப்பினும் மேலோட்டமாக கொஞ்சம் பார்ப்போமா:


பல ஆன்மீக எக்ஸ்பிரஸ்  வாசகர்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போதே பழைமையான சிவாலயம் தென்பட்டுவருகிறது.(அது அண்ணாமலை அல்ல;)சில ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு சித்தர் அல்லது துறவியின் உருவம் தெரிவது போலவும்,அவர்கள் பேசுவதுபோலவும் தெரிந்திருக்கிறது;தெரிந்து வருகிறது.


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் தொடர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்கு மட்டுமே இம்மாதிரியான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.

அதே சமயம்,கடுமையான பிரச்னைகளுடன் போராடுபவர்கள் அந்த சிந்தனையை காலையில் 30 நிமிடமும்,மாலையில் /இரவில் 30 நிமிடமும் வராமல் பார்த்துக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தாலே,அவர்களுக்கு எதிரான சூழ்நிலை மாறிவிடுகிறது.

மேலும்,பிரச்னையில் சிக்கியிருப்பவர்களின் தீய எண்ணங்கள்,தவறான மனோபாவம்/பொறாமை/ஆத்திரமான மன நிலை/தற்கொலை எண்ணங்கள் அடியோடு விலகியிருக்கின்றன.ஆக,மனத்தை சுத்தப்படுத்தும் மந்திரமாகவும் ஓம்சிவசிவஓம் இருக்கிறது.

ஓம்சிவசிவஓம்
நன்றிகள் : குருநாதர்கள்
 


Atheism - உண்மையான பகுத்தறிவு பிறந்ததே இந்து மதத்தில்தான்

இந்து வேதங்களில் பகுத்தறிவு

பகவத் கீதையில் அர்ஜீனனுக்கு பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார்:
நான் கூறியது யாவையும் ஆராய்ந்து
பிறகு உன் விருப்பப்படி செயல்படு

“இந்திய மொழிகளிலேயே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம் தான்” சொன்னவர் நோபல்பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென்.

“பகுத்தறிவோடு பொருந்தாத அறிவுரைகளை முனிவர்கள் சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் ஏற்கவேண்டியதில்லை;அறிவோடு பொருந்தும் வாசகங்களை பாமரர்கள் கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்” என்கிறது யோகவாசிட்டம் என்ற நூல்(11.18.2.3)

பகவத்கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர்,
‘நெருப்பு சுடாது என நூறுமுறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்;அனுபவம் தான் பிரமாணம்(கல்வி/பிரதானம்/முக்கியம்)’என்கிறார்.

இதுதான் நேர்மையான பகுத்தறிவு.தமிழகத்து அரசியல்வாதிகளில் சில ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு இந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல; சேம் சைட் கோல்!!!!

அவ்வாறு பேசுபவர்களே காலகஸ்திக்கும் திருநள்ளாறு கோவிலுக்கும் படை எடுக்கிறார்களே ? ஏன் 

நன்றிகள் : குருநாதர்
 

வெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!

நமது ஆன்மீக  குரு திரு.சகஸ்ரவடுகர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இதுவரை சுமாராக ஆயிரம் ஆத்மாக்களின் கர்மவினைகள் தீர ஆன்மீக வழிகாட்டுதல் செய்து அனைவருக்கும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து  தொடர்ந்து ஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும்  என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும்? என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)


இந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;


(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)


இதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.


20.2.2013 புதன் மாலை 6.37 முதல் இரவு 8.37 வரை
27.2.2013 புதன் மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
6.3.2013 புதன் மாலை 6.26 முதல் இரவு 8.26 வரை
13.3.2013 புதன் மாலை 6.20 முதல் இரவு 8.20 வரை
20.3.2013 புதன் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை
27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை

நீண்ட நாட்களாக தகுந்த வரன்  கிடைக்கவில்லையே? என்று ஏங்குபவர்கள்,அவர்களின் பெற்றோர்,சகோதர சகோதரிகள்,நட்பு வட்டம் என யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் மேற்கூறிய வழிமுறையில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் நிச்சயம் தகுந்த வரன் விரைவில் அமைந்துவிடும்.


அலுவலகத்தில் நியாயமான பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்காமல் திண்டாடுபவர்களும் இவ்வழிபாடு மூலமாக நிச்சயமாக அவர்கள் மகழ்ச்சியை அடைவார்கள்.


நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் மனமுருகி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயமாக ஸ்ரீகாலபைரவரின் அருளால் புத்தரபாக்கியத்தைப் பெறுவார்கள்


பிறரின் சதிச்செயல்களால் பிரிந்திருக்கும் கணவன்/மனைவி இருவரில் யாராவது ஒருவர் மட்டும் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவரிடம் முறையிட்டால்,பிரிந்தவர் சேருவர்.(அர்ச்சகர்/பூசாரியிடம் புலம்ப வேண்டாம்.அது புதுச்சிக்கல்களை உருவாக்கிவிடும்)


கடுமையான பண நெருக்கடியில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் வேண்டினால் நிச்சயமாக பணவரவு நிச்சயம்!


தனது திறமையும்,படிப்புக்கும் ஏற்ற வேலை தேடுவோர் அல்லது வேறு சிறந்த சம்பளத்தில் இடமாற்றத்துக்கு விரும்புவோர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்தால் அவர்கள் விரும்பும் வேலை கிட்டிவிடும்.


அன்புக்கு ஏங்கித் தவிப்பவர்கள்,தனிமையில் வாழ்ந்து தன்னையே வெறுத்து தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் அவர்களின் தனிமை போய்விடும்;தகுந்த நட்பு அல்லது வாழ்க்கைத் துணை அல்லது நெருக்கமான சிநேகிதம் உண்டாகும்.


(பலதமிழ்நாட்டுக்குடும்பங்களில் பணம்,பணம் என்று ஏங்குவதால் ரத்த உறவுகளிடம் ஆறுதலாகக்கூட பேச நேரமில்லாமல் இருக்கிறார்கள்;அல்லது வேண்டுமென்றே பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.இதனால் தான் பருவ வயதில் இருக்கும் மகன்/ள் அல்லது மனைவி/கணவன் தடம் மாறிச் செல்கிறார்கள்)
ஏழரைச்சனியால் அவதிப்படும் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிக ராசியினர் மற்றும் அஷ்டமச்சனியால் கஷ்டப்படும் மீனராசிக்காரர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரைச் சரணடைந்தால் அவர்களின் மன உளைச்சல்கள்,பண நெருக்கடிகள்,வர இருக்கும் அவமானங்கள் விலகிச் சென்றுவிடும்.
ப்ளாக் மெயில் அல்லது வீண் பழியால் சிக்கித் தவிப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

வெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்போர் அல்லது டெபுடேஷனுக்காக காத்திருப்போர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை மனதார வழிபட்டால் நிச்சயமாக அவர்கள் வேண்டியது கிட்டும்.
தொலை தூர நாடுகளில் வசிப்போர் இங்கே இருக்கும் எட்டு பைரவர்களை நோக்கியவாறு அமர்ந்து பைரவ சஷ்டிக்  கவசம் பாடினாலே போதுமானது;

மேற்கூறிய நேரத்தில்,ஸ்ரீகாலபைரவர் சன்னதியின் முன்பாக பைரவ சஷ்டிக்கவசம் பாடலாம்;ஸ்ரீகால பைரவர் மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்கலாம்.
முயன்று பார்ப்போமா!!! ஸ்ரீகால பைரவரின் அருளைப்பெறுவோமா!!!

ஓம்சிவசிவஓம்
 
நன்றிகள் : குருநாதர்

Saturday 16 March 2013

மார்ச் 15 முதல் ஆன்லைன் மூலம் இலவச தமிழ் வகுப்பு


அமெரிக்கவைச் சார்ந்த Go4Guru ஆன்லைன் கல்வி நிறுவனம் தமிழ் வகுப்புகளை இலவசமாக துவக்குகிறதுஇந்த ஆன்லைன்வகுப்புகளுக்காக தமிழ் நாட்டில் பல அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுஅவர்களுக்கு ஆன்லைன்பயிற்சியளிக்கப்பட்டு உள்ளதுஆறு வயதிற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்உலகத்தில் எந்தமூலையில் இருந்தாலும் தமிழ் கற்று கொள்ள இது ஒரு அறிய வாய்ப்புவெப் கேமிரா மற்றும் மைக் வசதிகளுடன் இந்த ஆன்லைன்வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து பேசிக் கற்றுக்கொள்ள முடியும்இந்த வகுப்புகள் முற்றிலும்இலவசமானதுமாணவர்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே இந்த வகுப்புக்களில் பங்கேற்கலாம் . இந்த இலவச ஆன்லைன்வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் Go4Guru.com என்ற இணைய தளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்இந்த தமிழ்ஆன்லையன் வகுப்புகள் மார்ச் 15ம் 
தேதி முதல் ஆரம்பமாகிறது. 
தினமலர் வாசகர் காயாம்பூ ராமலிங்கம்

உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட சிவராத்திரி விழா


தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி




ஸ்ரீ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக சிவராத்திரி திருவிழா

கோலாலம்பூர்மலேசியாசுபாங் ாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீற்றிருந்து தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு குறையாது ருள் பாலித்து வரும் ஸ்ரீ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 44ம் ஆண்டு வருடாந்திர மகா சிவராத்திரி திருவிழா 108 கலசாபி ஷேகத்துடன் ோலாகலமாக கொண் டாடப்பட்டது.
பல நூறு பக்தர்கள் ஆலயத்தில் ஒன்று திரண்டு தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்கடந்த ஞாயிறன்று நடை பெற்ற சிவராத்திரி திருவிழாவில் சமூக சேவகர் அண்ணாமலை உட்பட திரளானோர் கலந்து லிங்கேஸ்வரரின் ஆசியைப் பெற்றனர். தற்போது ஆலயத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஒரு சில நிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ளப் படவிருக்கிறதுஅதற்கு பொது மக்களின் உதவியையும் கொடை நெஞ்சங்களின் ஆதரவையும் ஆலய நிர்வாகம் நாடுவதாக செயலாளர் மணிகந்தன் கூறினார். 

கோலாலம்பூரிலிருந்து காயத்ரி

சிங்கப்பூரில் மகா சிவராத்திரி விழா


சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிவாலயங்களில் மகா சிவராத்திரிப் பெரு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றதுமார்ஷலிங் அருள்மிகு சிவ ிருஷ்ணர் ஆலயத்தில் மார்ச் 10ம் தேதி யாகசாலையில் வேத கோஷம்ந்நிதியில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனைவசந்த மண்டபத்தில் தேவாரப் பண்ணிசைநாதஸ்வர இசையாஞ்சலி என மகா சிவராத்திரிப் பெருவிழா நான்கு காலப் பூஜைகளாக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதுமுதல் காலம் நித்திய பூஜையைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சங்கல்பம்கலச பூஜைஸ்ரீ ருத்ர ஹோமம்ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா மேத ஸ்ரீ விஸ்வநாதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்விசேஷ வில்வ அர்ச்சனைஅலங்காரம்மகா ீபாராதனை என நடைபெற்றதுஇரண்டாம் கால பூஜை இரவு 9 மணிக்கு ொடங்கி ஸ்ரீ விஸ்வநாதப் பெருமானுக்கு ஸ்ரீ சிவ மூல மந்திர ஹோமம்அபிஷேகங்கள் ஆராதனைகள்அலங்காரம் நடைபெற்றதுமகா தீபாராதனையுடன் திரளான பக்தப் பெருமக்கள் கலந்து கொண்ட பால்குட அபிஷேகமும் மகா தீபாராதனையும்பாலாமணி சிவாச்சாரியாரின் சிவராத்திரி பற்றிய சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றனமூன்றாம் கால ூஜை இரவு ஒரு மணிக்குத் தொடங்கி ஸ்ரீ ருத்ர திரிசதி விஷேச ஹோமத்துடன் நடைபெற்றதுஅதிகாலை மணிக்கு நான்காம் கால பூஜை துவங்கியதுஇதில் விசேஷமாக ஸ்ரீ பஞ்ச அஸ்திர ஹோமத்துடன் சிறப்பு கலசாபிஷேகம்அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றதுமகா தீபாராதனைப் பெருவிழா நிறைவு பெற்றதுஸ்ரீ சிவ கிருஷ்ண லய பஜனைக் குழுவினரின் தேவாரப் பண்ணிசையும் மற்றும் ஆலய தேவாரத் திருமுறைக் குழுவினரின் இன்னிசையும் இரவு முழுவதும் நடைபெற்றுப் பக்தப் பெருமக்களுக்குப் பெரு விருந்தாக அமைந்ததுஆலய நிர்வாகக் குழுவினரும் அர்ச்சகர்களும் பெருந் திரளாக கூடிய பக்தப் பெருமக்களுக்கு அபிஷேக ராதனை கண்டு மகிழவும் இசை நிகழ்ச்சிகளைக் கேட்டு இன்புறவும் பிரசாதங்கள் சுவைத்து உண்ணவும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

 

ஒமாஹாவில் மகாசிவராத்திரி விழா


ஒமாஹா : ஒமாஹா இந்துக் கோயிலில் மார்ச் 09ம் தேதி மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுமாலை 5 மணியளவில் சங்கல்பத்துடன் துவங்கிய இவ்விழாவில் கலச பூஜைஏகாதச ருத்ர அபிஷேகம் ஆகியன நடத்தப்பட்டது. பின்னர் உபயதாரர்களும்பக்தர்களும் தங்கள் கைகளாலேயே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர்ூலவர் அபிஷேகத்தை தொடர்ந்து ஸ்படிகலிங்கத்திற்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்பக்தர்களின் ஜனைகளும்கர்நாடக இசைக் கச்சேரிகளும்வீணை கச்சேரியும் நடைபெற்றதுசிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த ிவ பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டதுஅஷ்டோத்திர நாமாவளி மற்றும் திரிசதியை தொடர்ந்து உத்திர பூஜை நடைபெற்றதுஇவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி