Saturday 16 March 2013

உங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவாக்குவது எப்படி?





நமது குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்?
நன்றி:உளவியலாளர்,டாக்டர் பெர்வீன் தாதாசஞ்சி

உங்கள் குழந்தையை உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள்.எதையும் திணிக்க வேண்டாம்.

குழந்தையை அணுகும்விதத்தில் ஒரே மாதிரியாக நடந்துகொள்ளுங்கள்.

குழந்தையின் செயலை விமரிசியுங்கள்.
குழந்தையை விமர்சிக்க வேண்டாம்.

ஒரு குடும்பமாக செயல்படுங்கள்.

குழந்தையை ஒப்பிட்டுப் பேசாமல் அவர்களிடையே இணக்கத்தை உருவாக்குங்கள்.

குழந்தையை மிரட்டினால் தொடர்ந்து கவனியுங்கள்.

நீங்கள் குழந்தையுடன் இருப்பதைவிட பெரியபரிசு எதுவும் கிடையாது.

நீங்கள் குழந்தையை அடிப்பது அது மற்றவர்களை அடிக்கத் தூண்டும்.

ஒரு முன்மாதிரியாக இருந்து குழந்தைகளிடம் நல்ல மதிப்பீடுகளை விதையுங்கள்.
ஒரு வேளையாவது குழந்தையோடு சேர்ந்து சாப்பிடுவது பந்தம் உருவாக உதவும்.

குழந்தை பொறுப்புள்ளவனா/ளாக மாறியதும் அவன/ளது சுதந்திரத்தை அதிகப்படுத்துங்கள்.

குழந்தையிடம் நிபந்தனையில்லாத பரிபூரண அன்பு செலுத்துங்கள்.

குழந்தையை விமரிசிப்பதைவிட புகழ்ந்து ஊக்கப்படுத்துங்கள்.

குழ்ந்தையுடன் பேரம் பேசுவது ஒன்றும் உங்கள் பலவீனம் அல்ல.


சில யோசனைகளைச் சொல்லுங்கள்.ஆனால் குழந்தை முடிவு செய்யட்டும்.

குழந்தை முக்கியமாக நினைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுங்கள்.

குறும்புப்பையன், கவனமில்லாதபெண் என்ற வார்த்தைகளை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள்.

வீடியோ, டி.வி.,கணினி விளையாட்டுக்களைக் குறைத்துவிடுங்கள்.
வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் குழந்தையுடன் அதிக நேரம் செலவழியுங்கள்.

வசதிகளால் பின்விளைவுகள் ஏற்படும் என்பதை குழந்தையிடம் சொல்லுங்கள்.

படுக்கையில் இருக்கும்போது பகலில் என்ன நடந்தது என்பதைப் பேசுங்கள்.

குழந்தை வளர்ந்ததும் இருக்கவேண்டிய பண்புகளை நினைத்துப் பாருங்கள்.

முறையான பழக்கவழக்கத்தை ஏற்படுத்தி அதனைக் கண்காணியுங்கள்.

புத்தகங்கள் கொடுத்து அவற்றின்மீதான ஆர்வத்தை வளர்த்தெடுங்கள்.

குழந்தை பாதுகாப்பாக உணர்வதற்கு வரம்புகளை விதியுங்கள்.

குழந்தையின் குறைகளை கேலி செய்வது அதன் சுயமதிப்பை குறையச் செய்யும்.
இந்தக்கருத்துக்கள் உங்கள் குடும்பத்தில் மிகச்சிறந்த அடுத்த தலைமுறையை நிச்சயம் உருவாக்கும்.

No comments:

Post a Comment