Wednesday 14 March 2012

அந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பாரத குடும்பங்கள் நாம் செய்ய வேண்டியவை - பாகம் இரண்டு :-

சுயநலம் அதிகரித்துக் கொண்டு வருகிறது, இரக்ககுணம் குறைந்து கொண்டு வருகிறது.  

இன்றைய மனிதர்களின் மத்தியில் சுயநலம் மட்டுமே அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் நீங்களும், உங்கள் சந்ததியினருமே கஷ்டப்படுவீர்கள். நீங்கள் சிலருக்காவது நன்மை செய்தால் தான் உங்களுக்கு சிலர் நன்மை செய்வார்கள். இதனால் குடும்ப அமைப்பு பெருமளவில் சிதைகிறதுசுயநலம் வேண்டும் இல்லையென்று சொல்லவில்லை அதற்காக சுயநலம் மட்டுமே வேண்டும் என்பது தான் தவறு ! நான் ஒரு முறை பேருந்தில் பயணம் செய்யும் பொழுது ஒரு வயதான மூதாட்டி சன்னல் ஓரம் அமர்வதற்காக ஒரு இளைஞனிடம் இருக்கையை ம்மாற்றி அமர சொன்னார்கள். ஆனால் அந்த இளைஞன் என்ன செய்தான் தெர்யுமா? மூதாட்டியை முகம் கொடுத்து கூட பார்க்காமல் திரும்பிக் கொண்டு புலம்ப ஆரமித்து விட்டான். அவள் நடத்துனரிடம் கேட்டுக் கொண்டாள். இருக்காய் மாற்றி தரும் படி, நடத்துனர் கேட்டதற்கு நான் காசு தருகிறேன் நான் எனக்கு பிடித்த இடத்தில் தான் அமருவேன் என சண்டைக்கே போய் விட்டான். நான் சாதாரண ஆள் இல்லை. நான் மீடியாவில் வேலை செய்கிறேன் என்னிடமே இப்படி நடந்து கொள்கிறீர்களே என கோபப்பட்டான். உன் ஆதிக்கத்தை காட்ட இது தான் நேரமா என என் மனதிற்குள் நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். குடும்பங்களில் ஆதிக்கம், அலுவலகங்களில் ஆதிக்கம், பொது இடங்களில் ஆதிக்கம் ஏன் இந்த புத்தி பிடித்த மனம் மனிதா ? அதே ஒரு இளம் பெண் இருக்காய் கேட்டால் இல்லை என்று சொல்வான அந்த வாலிபன்இதுவா மனிதத்தனம். தன்னலமற்ற பல தலைவர்களை தந்த நமது நாட்டிலா இது போன்ற மனிதர்கள் ? அதாவது பரவில்லை சில மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் உள்ள ஒரு பிச்சைக்காரனிடம் ஒருவன் சண்டை போட்டு அவனை காயப்படுத்துகிறான். நான் ஏனென்று கேட்டால் சொல்கிறான். இந்த ஆளு எப்ப பார்த்தாலும் என்னிடம் பிச்சை கேட்கிறான் என்று! பிச்சைகாரனுக்கு உதவிகள் செய்யாவிட்டாலும் பரவில்லை இது போன்ற இன்னல்களை தராதீர்கள். அன்னதானம் முடித்துவிட்டு பூஜைகள் முடிந்த பின்பே உணவு உட்கொண்ட அரசர்கள் பலர் நமது நாட்டில் மட்டுமே இருந்தார்கள் அவர்கள் மட்டும் இன்றைய இந்த நிலையினை பார்த்திருந்தால் என்ன ஆகும் ? பைடியக்காரர்களை அடிப்பது, திருநங்கைகளிடம் இன்பம் அனுபவிப்பது இது எல்லாம் ஒரு மனிதன் செய்யும் வேலையாபெரும்பாலும் மனிதர்கள் சொல்லும் ஒரே கருத்து நான் ஏன் அதை செய்ய வேண்டும் நான் நலமாக இருந்தால் போதும் என்பதுதான். பழைய படத்தில் என்னைக் கவர்ந்த ஒரு பாடல் வரியினை கூறி கொள்ள ஆசைபடுகிறேன். " எனக்கென போன போகுதுன்னு நழுவுற நேரம் பார்த்து, நாடு முழுதும் காட போன உனக்கு வீடு எங்க மிஞ்சும்? " இது தான் அந்த பாடல். யோசித்து பார்தொமேயனால் பல அர்த்தங்களை உள்ளடக்கயுள்ளது இந்த வரிகள். சுயனலவாதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் அவர்கள் தீண்ட தகாதவர்கள் போல கருதப்படவேண்டும். அப்போது தான் அந்த நாட்டில் அமைதி நிலவும். இது போபண்ற கசப்பான உண்மைகளை பல சொல்லலாம். நாமே உணரும் வரை இந்த சுயநலவாதிகளின் தாக்கம் பல அப்பாவிகளின் கண்ணீர் மட்டுமே.

No comments:

Post a Comment