Thursday 13 December 2012

நமது தொன்மையான சிறப்பான மொழி சமஸ்க்ரிதமும் தமிழுமே



ஸம்ஸ்க்ருதம் ஏன் பயில வேண்டும்?

நமது புராதன இந்துயாவில் இரண்டே இரண்டு மொழிகள் இருந்தன.ஒன்று நமது தாய்மொழியாம் தமிழ்.இன்னொன்று சமஸ்க்ருதம்.இந்த இரு மொழிகளும் சிவபெருமானின் கையில் உள்ள உடுக்கை ஒலியிலிருந்து பிறந்தன.சமஸ்க்ருதத்தை பாணினி என்ற மகரிஷியும் தமிழை அகத்தியர் என்ற மகரிஷியும் நமது பாரத நாட்டில் பரப்பினர்.இந்த இரு மொழிகளும் அந்தந்த காட்டுவாசிகளின் உச்சரிப்போடு கலந்து 1700 மொழிகளாகப் பிரிந்துவிட்டன.இப்படி 2 மொழியானது 1700 மொழியாகப் பிரிவதற்கு சுமார் 25,000 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.
இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகியுள்ளன.முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.அப்போ 2 மொழியானது 1700 மொழியாக வளர 17,50,000 ஆண்டுகள் ஆகியுள்ளன என நம்பலாம்.ஆனால் வெள்ளைக்காரனால் நம்ப முடியாது.

இராமாயணகாலத்தில் தான் குரங்கிலிருந்து மனிதன் நாகரீகமடையத்துவங்கிய காலம் என புதைபொருள் ஆய்வாளர்களும் மானுடவியல் அறிஞர்களும் மதிப்பிட்டுள்ளனர்.இராமாயணத்தில் அசோகவனத்திலிருந்த சீதையிடம் அனுமன் இனிய மொழியில் பேசினான் என கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது ராமாயணகாவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.இங்கு இனிய மொழி என்பது நமது தமிழ்தான்.ஆக ஆஞ்சனேயருக்கும் கூட பல மொழிகள் தெரியும் என்பது இதன் மூலம் புலனாகிறது.
தமிழ் மொழியில் திருமந்திரம் என்ன சொல்லுகிறது?இன்றைய நவீன உலகின் சிக்கல்கள் அனைத்தையும் எப்படி தீர்ப்பது என்பதைக்கூறுகிறது.இது தமிழர்களாகிய நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்?திருமந்திரமா அது என்ன என்றல்லவா கேட்கிறோம்?
தமிழ் மொழியில் எத்தனை வளமான இலக்கியங்கள், இலக்கணங்கள் உள்ளனவோ அதே அளவிற்கு சமஸ்கிருதத்திலும் உள்ளன.நமது பாரதத்தின் இரு கண்களாக இந்த இரு மொழிகளும் உள்ளன.
சமஸ்க்ருதம் பற்றி ஒரு விஞ்ஞான ஆய்வு முடிவு:ஒரு கணிப்பொறியை ஸ்பெஷலாக உருவாக்கினர்.அந்த கணிப்பொறியின் டெஸ்க்டாப்பின் முன்பாக ஒரு மனிதன் நின்று கொண்டு பெண் என்று கூற வேண்டும்.இந்த பெண் என்ற வார்த்தையை இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் கூற வேண்டும்.(உலகில் 6000 மொழிகள் பேசப்படுகின்றன).எந்த மொழியில் பெண் என உச்சரித்ததும் பெண்ணின் உருவம் தெளிவாகத் தெரிகிறதோ அந்த மொழியே கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என முடிவு செய்தனர்.சமஸ்க்ருதத்தில் மகிளா என உச்சரித்ததும் கணிப்பொறியின் முகப்பில் டெஸ்க்டாப்பில் பெண்ணின் உருவம் தெளிவாகத் தெரிந்தது.
இன்று நமது இந்துயா(பாரதம்)வில் சமஸ்க்ருதத்தை இரண்டாவது மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி.
ஆங்கிலேயன் சமஸ்க்ருதத்தை செத்த மொழி என்று கூறினான்.ஏனெனில் சமஸ்க்ருதம் உலகம் முழுக்கப்பரவினால் ஆங்கிலமும் இங்கிலாந்தும் அழிந்துவிடும் என பயந்தான்.ஆங்கில மொழியியல் வல்லுநர்கள் அப்படித்தான் மதிப்பிட்டனர்.எனவே சமஸ்கிருதத்தை இறந்த மொழி என வதந்தி பரப்பினர்.
(நமது பகுத்தறிவுப்பகலவன்களுக்கு வசதியாகப் போய்விட்டது.சமஸ்க்ருதம் அய்யர்களின் மொழி.எனவே அது செத்துப்போன மொழிதான் என தூற்றினர்.நமது அப்பாக்களும் அதை நம்பினர்.தமிழிலிருந்து சமஸ்க்ருதத்திற்கும்
சமஸ்க்ருதத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் துறை அழிந்தது.ஜோதிடம், பண்பாட்டுப்பரிமாற்றம் நின்று போனது.ஆனால் இந்த பகுத்தறிவுப்பகலவன்கள் தனது பெயரை மட்டும் சமஸ்க்ருதத்தில் வைத்துக்கொண்டனர்.தமிழுக்கும் துரோகம் செய்தனர்.கருணாநிதி,தயாநிதி,கலாநிதி இவையெல்லாம் சமஸ்க்ருதப்பெயர்களே!)

இன்று 15 வயது நிறைவடைந்த எவரும் இலவசமாக சமஸ்க்ருதம் பயிலலாம்.இதற்காக ஸமஸ்க்ருதபாரதி என்ற தன்னார்வ அமைப்பு உலகம் முழுவதும் ஸமஸ்க்ருதம் பேச எழுத சொல்லித்தருகிறது.ஏராளமான வெள்ளைக்காரர்கள் தினமும் அஞ்சல் வழியாக சம்ஸ்க்ருதம் பயின்றுவருகின்றனர்.
நீங்கள் பள்ளி, கல்லூரி, நிறுவனம் எது நடத்தினாலும் சரி.குறைந்தது 10 பேர்கள் சமஸ்க்ருதம் பயிலத் தயாராக இருந்தாலே போதும்.கீழ்க்கண்ட முகவரிகளைத் தொடர்பு கொண்டாலே இலவசமாக சமஸ்க்ருதம் 10 நாள் பேச்சுப்பயிற்சிக்கு ஆசான்கள் உங்கள் இடத்துக்கே வருவர்.வந்து பயிற்றுவிப்பார்கள். ஆசான் கட்டணம் கூட கிடையாது.
ஒரு நாளுக்கு ஒரு முறை இரண்டு மணி நேரம் வீதம் வெறும் 10 நாளில் சரளமாக சமஸ்க்ருதம் பயிலலாம்.
தமிழ்நாட்டில் சம்ஸ்க்ருதபாரதியின் அஞ்சல்வழிப்பயிற்சியின் மாநிலத்தலைமையகம் இராஜபாளையத்தில் உள்ளது.
முகவரி:சமஸ்க்ருத பாரதி, பி.ஏ.சி.ஆர்.பவனம்,ரயில்வே பீடர் ரோடு, இராஜபாளையம்-626117.தொலைபேசி எண்:91-04563-231027விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு.நேரடிப்பயிற்சி தருவதற்கான தமிழ்நாடு மாநில அலுவலகம்:ஸம்ஸ்க்ருத பாரதி, எண்:43, B-6 ராம சதுக்கம் 3 வது மாடி,வள்ளுவர்க் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34.தொலைபேசி எண்கள்:044-28272632, 28272639, 0-91-94437-22009.மேலும் விபரமறிய
www.sanskrita-bharathi.org

No comments:

Post a Comment