Thursday 13 December 2012

உலக அறிவியல்துறைகளின் முன்னோடி நமது பாரதம்


உலக அறிவியல்துறைகளின் முன்னோடி நமது பாரதம்



1.நமது பாரதத்தில் கி.பி.500 முதல் பூஜ்யத்தை சூன்யம் என்று அழைத்தனர்.குறி(ஸிம்பல்) மற்றும் 1-10 வரை உள்ள தசம ஸ்தான முறை,இடத்திற்கு ஏற்ற மதிப்பு அறியப்பட்டன.சீனா-ஜப்பானில் கி.பி.600 முதல் 700 க்குள் இந்த முறைகள் பரவின.
கி.பி.900 வாக்கில் அரேபியாவிற்கும்,கி.பி.1300-இல் ஐரோப்பாவிற்கும் இந்த எண்கணித அடிப்படை அறிவு பரவியது.இன்று இந்த வலைப்பூ எழுதுமளவிற்கு கணினி தொழில்நுட்பம் (0,1 என்பதே கணினியின் அடிப்படை மொழி) வளர்ந்துவிட்டது.

2.பூஜ்யம்,1 முதல் 9 வரையிலான எண்கள் ஆர்யபட்டர் காலத்திலிருந்து(கி.பி.425) நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.ஐரோப்பாவில் இந்த எண்கணித முறை கி.பி.1546(Cataneo)யும்,மற்றும் கி.பி.1613(Cataldi)யும் வழக்கத்திற்கு வந்தன.அதற்கு முன்பு ஐரோப்பாவினர் இதில் அடிப்படை அறிவு அற்றவர்களாக இருந்தனர்.
3.தக்ஷ்ச சீலத்தில் ஏழு வருடங்களுக்கு மருத்துவம் படித்த ஜீவகன் மருத்துவத்திற்குப் பயன்படாது என்று ஒரு செடி கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை;மருந்திற்குப் பயன்படாதது என்று ஒரு வேர் கூடக் கிடையாது என தனது அனுபவத்தைக் கூறியுள்ளார். ‘ந அஸ்தி மூலம் அனெளஷதம்’ எனக்குறிப்பிடுகிறார்.
4.இன்று பள்ளிகளில் பயன்படுத்தப்படும்’ வர்க மூலம், கன மூலம் கண்டுபிடிக்கும் முறைகள்’ கி.பி.425 ஆம் ஆண்டில் ஆரியபட்டர் கண்டுபிடித்தது ஆகும்.
5.பரத்வாஜ மகரிஷி அவர்கள் எழுதிய புத்தகம் ப்ருஹத் யந்த்ர ஸர்வஸ்யம்.இதன் 40 வது அத்யாயம்:ப்ருஹத் விமான சாஸ்திரம்.
தூய கேது மின்சார சக்தியை உடையது என்று அவர் குறிப்பிடுகிறார்.(வித்யுத் கர்பஸ்தேஷி தூயகேதுவ:)
இவர் எழுதியுள்ள இன்னொரு நூல் அம்ச போதிநி.
இதில் ஒளி, வெப்பம்,விமானம் பற்றி விவரித்துள்ளார்.
6.லலித விஸ்தார என்ற புத்த நூல் கி.மு.100 இல் எழுதப்பட்டது.அதில் உலகின் மிகப் பெரிய எண்ணாகிய தல்லஷண(10 பவர் 53)என்பதையும்,அதாவது 10க்குப்பின் 53 பூஜ்யங்கள்! உலகின் மிகச்சிறிய எண்ணாகிய ப்ரமாணுஜ (அணுத்துகள் 7 பவர் 10):=அங்குல பர்வ என்பதையும் குறிப்பிடுகிறது.
7.கி.பி.1987 வாக்கில் இன்றைய மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்திரத்தில் ஜெர்மனியைச்சேர்ந்த பெண் விஞ்ஞானிகள் பலமாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
முடிவில் அங்குள்ள மண்ணில் அணுக்கதிர் வீச்சு கதிரியக்கம் இருப்பதுக் கண்டு பிடிக்கப்பட்டது.அந்த கதிர்வீச்சின் வயது சுமார் 5000 முதல் 5100 வருடங்கள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.இன்று 27.5.2009 தேதிப்படி கலியுகம் துவங்கி 5109 ஆண்டுகள் ஆகின்றன. ஜாதகப்பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
8.புராதன மருத்துவ ரிஷி சுஸ்ருதர் கூறியுள்ளார்: மனித உடலில் முக்கியமாக 300 எலும்புகளும், 700 நரம்புகளும் உள்ளன.மனிதத் தோல் 7 அடுக்குகள் கொண்டது.
9.இன்றைய கணிப்பொறியில் ஆரியபட்டரின் குட்டகம் என்ற முறை பயன்படுத்தப்பட்டுவருகிறது.இது இன்றைய ஆரக்கிளுக்குச் சமம்.

No comments:

Post a Comment