Tuesday 4 February 2014

காப்புரிமை என்ற கொள்ளையிலிருந்து யோகா தப்பியது!!!

மஞ்சளுக்கு காப்புரிமை பெற வெளிநாட்டினர் முயற்சித்தனர்;தோல்வி!
கீழாநெல்லியின் மருத்துவகுணங்களை தாமே கண்டுபிடித்ததாக ஆவணங்களைத் தயார் செய்து சர்வதேசகாப்புரிமை பெற விண்ணப்பித்தார்கள்;விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் ஸ்டடிஸ் என்ற அமைப்பு பிராணிக் ஹீலிங் முறையை காப்புரிமை பெற்று தமது பாக்கெட்டுக்குள் அடைக்கப்பார்த்தது.
யோகாவையும்,பிராணிக் ஹீலிங்கையும்  காப்புரிமைச்சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்று புதுடெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து நமது பாரம்பரிய யோகக்கலையை காப்பாற்றிவிட்டது.
யோகா மூலம் சிகிச்சை,நல்வாழ்வு,பயிற்சிகள் அளிக்கும் நமது நாட்டின் முன்னணி ஆன்மீக அமைப்புகள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன.
நமது தேசத்தின் தொன்மையான ரிஷிகளின் அருளால் கிடைத்த அனைத்துமே மனித குலம் மொத்தத்திற்கும் பொதுவானவை;அவற்றை தனியார் சொந்தம் கொண்டாடுவது ஐரோப்பிய அமெரிக்க பணப்பிசாசுகளின் குறும்பு.
எனவே,நாம் நமது முன்னோர்களின் சாதனைகள் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
நன்றி:விஜயபாரதம்,பக்கம் 32,வெளியீடு 7.2.14
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment