Thursday 27 February 2014

வில்வத்தின் மகிமை

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளே மஹாசிவராத்திரி ஆகும்.அப்படிப்பட்ட மஹாசிவராத்திரியன்று ஒரு பக்தன் மனப்பூர்வமாக பஞ்சாட்சரமந்திரம் ஜபித்தவாறு மூன்று கிளையுள்ள வில்வ இலையை சிவலிங்கத்தின் மீது போட்டான்.சிவபெருமான் என்ற சதாசிவன் அந்த பக்தனிடம்
என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

அதற்கு அந்த பக்தன், இந்திரப்பதவி வேண்டும் என்று வேண்டினான்.அதன்படி சதாசிவன் அவனுக்கு இந்திரப்பதவி அளித்தார்.


வரம் பெற்ற அந்த பக்தன் தனது வீட்டில் அமர்ந்து சிரித்தபடியே இருந்தான்.அதைக் கவனித்த அவனது மனைவி அந்த சிரிப்பிற்கு காரணம் கேட்டாள்.அதற்கு அந்த பக்தன், சதாசிவனே என்னிடம் ஏமாந்தார் என்றான்.ஒரு வில்வ இலைக்காக இந்திரப் பதவியைத் தந்தார்.நான் அவரை ஏமாற்றிவிட்டேன் என்றான்.


அதே சமயம் சதாசிவன் இருக்குமிடமான திருக்கையிலாயத்தில் சதாசிவன் சிரித்துக் கொண்டிருந்தார்;பார்வதிதேவி அதற்கு காரணம் கேட்டாள்.
அதற்கு சதாசிவன், பூவுலகில் ஒருவன் சிவராத்திரியன்று என்னை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டான்.அவனுக்கு சிவலோகம் தர வேண்டும் என்று விரும்பி,அவனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன்.

அதற்கு அவன் இந்திரப்பதவியைக் கேட்டான்.எக்காலமும் அழியாத சிவலோகப்பதவியைப்பெறுவதற்குப் பதிலாக,அழியும் இந்திரப் பதவியைக் கேட்டான்;அவன் ஏமாந்துவிட்டான் என்று சொல்லி சிரித்தார்.
வில்வ இலையால் இறைவனைப்பூசித்தால் சிவலோகம் பெறலாம்.பெறமுடியாதது என்று எதுவுமில்லை;

மேலும் சிவராத்திரியன்று வில்வ இலையைக் கொண்டு இறைவனைப் பூசித்தால் இறையருளைப் பெறலாம்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

1 comment:

  1. Play Baccarat for Free - Wolverione
    The first 바카라 online casino where you can play Baccarat, the game was in 1998. The game is one of the 샌즈카지노 best casinos for baccarat. In terms of the 메리트카지노 gameplay

    ReplyDelete