Monday 20 May 2013

ஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து





ஓஷோ சாகரத்தின் சங்கமமாக கருதப்படுகிறார்.இவர் கி.பி.1911 ஆம் ஆண்டில் இந்தியாவில் புனே அருகில் உள்ள குச்வாடா என்ற கிராமத்தில் பிறந்தவர்.இவரது ஆளுமையைச் செதுக்கியவர் இவரது பாட்டி!!!
இதனால்,21 வயதிலேயே தத்துவத்தில் எம்..முடித்தவர்.இவரது சிந்தனைக்கு ஏற்ற இடமாக அமெரிக்கா இருந்தது.இவரது போதனைகள் மிக யதார்த்தமானதாக இருக்கின்றன.இதனால்,அமெரிக்க அரசாங்கமேஇவரைப்பார்த்துப் பயந்துபோனது.இவர் 64,000 ஏக்கரில் ரஜனீஷ்புரம் என்ற நகரத்தையே உருவாக்கினார். (அமெரிக்காவில்தான்). உலகிலேயே அதிகமான மெர்ஸிடஸ் பென்ஸ்கார்கள் வைத்திருந்தவர் என்ற கின்னஸ் சாதனையை இவர் படைத்தவர்.அத்தனையும் இவர் மீதான பாசத்தால் இவரது அமெரிக்க சீடர்கள் அன்பளிப்பாக கொடுத்தவை.
இந்தியாவை விட்டுச்செல்லும்போது இவர் தனதுதாய்நாட்டின் பெருமையை உணரவில்லை.உலகம் முழுக்கச் சுற்றிய பின்னர்தான் ,தனது தாய்நாடான இந்தியாவின் அருமை பெருமை புரிந்தது.அதன்விளைவாக,இவர் எழுதிய புத்தகமேநான் நேசிக்கும் இந்தியா’.சுமார் 500 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் இந்தியாவின் ஆன்மாவை நம் ஒவ்வொருவருக்கும் காட்டுகின்றது.
இவர் சொல்வது என்னவெனில்,மதத்தலைவர்களும்,அரசியல்வாதிகளும் கூட்டுசேர்ந்து, ‘காமம் ஒரு கொடூரமான பாவம்என இந்த பூமியையே நம்ப வைத்துவிட்டனர்.அதனால்தான் நாம் அனைவரும் மனநோயாளிகளாக வாழ்ந்து சாகிறோம்.ஆனால்,காமம் தான் நம்மை இயக்கும் சக்தி என விளக்குகிறார்.
எனது அனுபவப்படி,ஓஷோவைப் புரிந்துகொள்ளவேண்டும் எனில் முதலில்ஓஷோ:வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்என்றபுத்தகத்தை முதலில் வாசிக்க வேண்டும்.அடுத்ததாக, “காமத்திலிருந்து கடவுளுக்குஎன்ற புத்தகத்தை சுமார் 50 முறையாவது ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டும்.சிந்தனைத் தெளிவு கிடைக்கும்.
இவரது புத்தகங்களில் ஒன்றுமறைந்திருக்கும் உண்மைகள்”= இந்தப்புத்தகத்தை நான் முதன்முதலில் வாசித்தபோது அன்று இரவு முழுக்க தூங்கவேயில்லை.இவ்வளவு சீரும் சிறப்பும் மிக்க எனது இந்துதர்மத்தைப் பற்றி ஏன் பலருக்குத்தெரியவில்லை? தெரிந்தால் தன்னம்பிக்கையின்றி வளரும் இந்திய இளைஞர்கள் தங்களது முழுசக்தியையும் உணர்ந்துகொள்வார்களே!

(ஆக,அரசியல் அக்கப்போர்கள் இந்துதர்மத்தின் பெருமைகளை நமது நாட்டுமக்கள் தெரிந்துகொள்ளாமல் தடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன.மக்கள் முட்டாள்களாக இருக்க,இருக்க அவர்களின் அரசியல் வியாபாரம் செழிப்பாக ஓடும் என்பதில்தான் கவனமாக இருக்கின்றனர்.
அதன்பிறகு,நான் இந்த புத்தகத்தை இதுவரை 100 தடவைக்கும் மேல் வாசித்துவிட்டேன்.)
இந்துதர்மக் கோட்பாட்டின்படி, 84 லட்சம் வகையான உயிரினங்கள் இருக்கின்றன.நவீன,உயிரியலும் இதை உண்மைதான் என்பதைக் கண்டறிந்துள்ளது.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்,மனிதன் ஒவ்வொருவரும் இந்த 84 லட்சம் உயிரினங்களாகப் பிறந்தப்பின்னர்தான், மனிதப் படைப்பில் வரமுடியும் என இந்துதர்ம சாஸ்திரங்கள் விளக்குகின்றன.

பல லட்சம் பிறவிகள் கடந்து மனிதப்பிறவியடைந்தும் கூட ஏன் வெட்டிவேலை பார்க்கவேண்டும்?ஏன் இவ்வரிய வாழ்க்கையை வீணடிக்கவேண்டும்? ஆகவே,ஆத்ம பரிசோதனையில் ஈடுபடுங்கள்.

ஒரு யானை தான் இறக்கும் தருவாயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பிருந்தும்,ஒரு முயலுக்கு புகலிடம் கொடுத்தமையால்,விழிப்புணர்வு ஏற்பட்டுஅதன் அடுத்த பிறவியில் மனிதனாய் பிறக்க நேர்ந்தது. அவர் தாம் புத்தர்!
ஜோதிடர்களின் அறிவுரைப்படி உலக சுகங்கள் அனைத்தும் கிடைக்கும்படியும்,கவலைகள் அறியாவண்ணம் இருக்குமாறு தன் மகன் சித்தார்த்தனை
வளர்த்தார் அரசர்.
சுகபோகங்களில் மூழ்கித் திளைத்திருந்த சித்தார்த்தன்,ஒரு நாள் நடு இரவில் கண்விழித்துப்பார்க்கையில்,அந்தப்புரத்து மங்கையர் பலர் அலங்கோலமாய் படுத்திருக்க,குறட்டைவிட்டுக்கொண்டும்,வாயிலிருந்து எச்சில் வழிந்தும் மற்றும் பிற அங்கங்கள் நாறிட காட்சிதர இக்கொடும் காட்சியை முதல் முறையாகக் கண்ட சித்தார்த்தன், மனம் வெதும்பி இம்மாயையை விட்டு விலகி,ஞானத் தேடலுக்கு ஆயத்தமானார்.ஆதாரம்:புத்தரின் உபதேசங்களை 12 தொகுப்புகள்தம்மபதம்என்றதலைப்பில் விளக்க உரைதந்துள்ளார் ஓஷோ!

சரகர் ஒரு அந்தணர்,நாடு புகழும் பெரும்பண்டிதர்.அரசவையில் முக்கிய ஆலோசகர்.இவர் ஞான வேட்கை கொண்டு புத்தரின் நேரடிச் சீடரான ஸ்ரீகீர்த்தியின் சீடரானார்.கனவில் ஒரு பெண் உருவம் தோன்றியது.அப்பெண்ணே தனது உண்மை குரு என்றுணர்ந்து,அவரைத் தேடிச்சென்றார்.ஒரு தாழ்குலப்பெண் அம்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருப்பதைக் காண,அவரே தன் ஆதர்ச குரு என்பதை உணர்ந்துகொண்டார்.அவரை சரகர் சரணடைந்தார்.குரு,சீடர் இருவரும் இடுகாட்டில் வாழ்ந்தனர்.
சுடுகாட்டில் ஆட்டம்,பாட்டம்,நிர்வாணத் தியானம் என்று ஒரு விசித்திர பாடசாலை அரங்கேறியது.அங்கு செல்வோரெல்லாம் இவரைப்பின்பற்றுவதும் ஆயிற்று.நாட்டுமக்கள் இவரை இழிசொல்லால்தூற்றினர்.இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட அரசனும்தன் அபிமானத்துக்குரிய ஆலோசகர் இவ்வாறுமாறிப்போய்விட்டானே என்ற ஆதங்கத்தில், சரகரை அழைத்து வரசில பெரியோர்களை தூது அனுப்பிவைத்தார்.
சரகர் அவர்களுக்காக 120 பாடல்களைபாடினார்.சென்றவர்கள் திரும்பவில்லை.இதையடுத்து சரகரின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த ராணி சரகரைக் காணச் சென்றாள்.ராணிக்காக 80 பாக்களைப் பாடினார் சரகர். ராணியும் நாட்டையும் அரண்மனையையும் துறந்தாள்.கலவரப்பட்ட அரசர் தானே நேரில் சென்று சரகரைச் சந்தித்தார்.அரசனுக்காக சரகர் மேலும் 40 பாக்களை(பாடல்களை)ப் பாடினார்.அரசர் சரகரை சரணடைந்தார்.அரசனே மாறிப்போனதால்,அந்த ராஜ்ஜியமே மெல்ல,மெல்ல சரகரின்பக்கம் திரும்பியது.அவர் இயற்றியப்பாக்களைத் தான்சரகரின் ராஜகீதம்என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தந்திரயோகம் தந்து அருளினார் சரகர்.
அதேசமயம்,உலகின் முதல் யோகி எனப்படும் பரமசிவன், பார்வதிதேவிக்கு அருளியது தந்திரசாஸ்திரம் எனலாம்.
இதுநாள் வரை நடைமுறையில் இருந்து ,இருக்கின்ற,இனிமேலும் வரக்கூடிய அனைத்து தியான முறைகளையும் உள்ளடக்கிய 112 வகையான தியான செயல்முறைகளின் மூலம் தந்திரயோகத்தை பார்வதிதேவிக்கு உபதேசிக்கிறார் பரமசிவன்.

சுவாமி ராமதீர்த்தர், ரமணமகரிஷி, புத்தர்,ஜெ.கிருஷ்ணமூர்த்தி, குர்ஜிப் ஆகியோர் இதில் எந்த வகையான தியானம் பயின்று முக்தி அடைந்தார்கள் என்ற சுவராஸ்யமான குறிப்புகளை ஓஷோ தருகிறார்.
இவ்வழிமுறைகள் அனைத்தும்விஞ்ஞான பைரவ தந்திரஎன்ற ஆதி நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.எவரும் அறியாமல் ரகசியமாக நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்ட இந்நூலுக்குஒஷோ1200 பக்கங்கள் கொண்ட விளக்க உரை எழுதியிருக்கிறார். “The book of Secrets”விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.இப்புத்தகத்தை வாங்கித் தெளிவு பெறுக.
இவரை மேலும் வளரவிட்டால் தங்கள் அமெரிக்கநாட்டுக்குள் (குறிப்பாக கிறிஸ்தவர்களின்)மனோபாவத்தையே மாற்றி மேற்கத்தியர்களின் போக்கையே திசை திருப்பிவிடுவார் என்று அஞ்சி அமெரிக்க அரசாங்கம் (அதிபர் ரொனால்டு ரீகன் காலத்தில்) ஓஷோவை காரணமின்றி சிறையில் அடைத்தது.அவருக்கு ஊசி மூலமாக மெல்லக்கொல்லும் விஷத்தை உடலில் ஏற்றியது.பின்னர்,குற்றங்கள்நிரூபிக்க முடியாததால் டெக்னிக்கல் காரணம் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எந்த ஐரோப்பியநாட்டுக்குள்ளும் நுழையாதபடி அமெரிக்க எதேச்சதிகாரம் சதி செய்தது.இங்கிலாந்தில் transit flightக்காக காத்திருந்த வேளையில் கூட 6 மணிநேரம் லண்டன் ஜெயிலில் பிடித்து வைத்திருந்தார்கள்.
எதிலும் துணிவு,சமன்பாட்டு நோக்கமும் நெஞ்சுரமும் கொண்ட ஓஷோகிறிஸ்தவ உலகத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.
எந்த ஒரு சாமனியனும் முக்தி அடையலாம் என்பதற்கு உதாரணமாக ஓஷோ உலகிற்கு ஒரு விடிவெள்ளி.
ஆன்ம,தத்துவவிஷயங்களில் அவர் தொடாத சப்ஜெட்டே கிடையாது.
600 க்கும் மேற்பட்டபுத்தகங்கள் இவர் எழுதியுள்ளார்.இப்படி எந்த துறவியும் இதுவரை எழுதியதில்லை;1800 தலைப்புகளில் இவரைப்போல் இனி ஒருவர் பேசுபவர்பிறப்பாரா?என்பதும் சந்தேகமே!!!இதுவரை இவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளின் மொத்தம் 6 கோடி.

இவர் கி.பி.1986 வாக்கில்தான் இந்த பூமியை விட்டுச் சென்றார்.இவரது போதனைகளைக் கண்டு,இவர் ஒரு செக்ஸ் சாமியார் என்றே உலகம் நம்புகிறது.

No comments:

Post a Comment