Saturday 6 April 2013

அயோத்தி இராமர் கோவில்:உண்மை என்ன?

அயோத்தி: உண்மை நிலை என்ன?

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 ஆம் தேதியை இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் துக்க நாளாகக் கொண்டாடுகின்றன.அன்றுதான் 6.12.1992 அயோத்தியில் பாபர் மசூதியை பா.ஜ.க., வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ்.,சிவசேனா போன்றவை இடித்தன.எனவே, இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இல்லை என இந்திய முஸ்லீம்கள் துக்க நாளாகக் கொண்டாடுகின்றன.(அதே சமயம் பாகிஸ்தானுக்கு பயங்கர சந்தோஷம்! இந்திய முஸ்லீம்களைக் கொண்டே இந்தியாவை அழிக்க திட்டமிடத்துவங்கியது.பாகிஸ்தானின் பள்ளிப்பாடத்திட்டத்திலேயே இந்திய எதிர்ப்பு இருக்கிறது.நிஜத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய முஸ்லீம்கள் மீது சிறிதும் பாசம் கிடையாது.இந்தியா அழியவேண்டும் என்பது மட்டுமே இலட்சியம்.)

(இந்தியா சுதந்திரம் வாங்கிய கி.பி.1947 ஆம் ஆண்டில் எனது நாடு பாகிஸ்தான் என இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லீம்களை பாகிஸ்தான் அரசும்,பாகிஸ்தான் முஸ்லீம்களும் ஏற்றுக்கொள்ளவில்லை;அவர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காக உருவாக்கிய அமைப்புதான் முஹாஜிர் குவாமி இயக்கம்?!)



அதேநாளை இந்துக்கள்,இந்து இயக்கங்கள் வெற்றி நாளாகக் கொண்டாடுகின்றன.இதில் எது நிஜம்? என்பதை அரசு ஆவணங்கள், தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகள் என பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்தால் அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.

விஸ்வ இந்து பரிஷத் கூறுவது என்ன?

இந்தியா முழுக்க சுமார் 30,000 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு, அவை மசூதிகளாகவும், சர்ச்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.நாங்கள் கேட்பது என்னவென்றால் அதில் 3 இடங்களை மட்டும் இந்துக்களாகிய எங்களுக்கு விட்டுக்கொடுங்கள்.எங்களின் வேதங்களில் அந்த 3 இடங்கள் புனித இடங்களாக எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த மூன்று இடங்கள் அயோத்தி ராம ஜன்ம பூமி, மதுரா கிருஷ்ண ஜன்ம பூமி, காசி சிவன் கோவில்!!!!

சரி! ஒரு இடம் மசூதி என்பதற்கு உரிய அடையாளங்கள் எவை எவை என திருக் குரான் கூறுகிறது?

1.மினார் (உயர்ந்த கோபுரம்,அதன் மேல் முனையில் பச்சைநிறம்) இருக்க வேண்டும்.(அயோத்தியில் மினார் அந்த இடத்தில் இல்லை)

2.குளம் அல்லது நீர்நிலை = தொழும் முன் முஸ்லீம்கள் கை மற்றும் கால்களை சுத்தப்படுத்த இருக்க வேண்டும்.(அயோத்தியில் அந்த இடத்தில் நீர் ஆதாரம் இல்லை)

3. தொடர்ந்து 14 வருடங்கள் தினமும் அங்கு தொழுகை நடத்தியிருக்க வேண்டும்.(அயோத்தியில் அந்த இடத்தில் சுமார் 400 ஆண்டுகளாக ஒரு நாள்,ஒரு முறை கூட தொழுகை நடக்க வில்லை;
6.12.1992 க்குப் பின்பு ஒரு முறை அரசியல்பின்புலத்தால் தொழுகை நடந்தது)


ஆக,அந்த இடம் பாபர் மசூதி அல்ல;பாபரின் தளபதிகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ராமர்கோவில்தான்.இந்த உண்மை காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும்;பாரதிய ஜனதாவுக்கும் தெரியும்.அந்தப் பகுதி முஸ்லீம் தலைவர்களுக்கும் தெரியும்.

ஆக,மதத்தில் அரசியல் புகுந்தது.காங்கிரஸின் சிறுபான்மை அணியின் அகில இந்தியத்தலைமை இந்த பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் பார்த்தது.காங்கிரஸ்கட்சியும் தான்!!!

வரலாறு சொல்வது என்ன?

கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்புவரை 76 முறை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அயோத்தியை மையமாகக் கொண்டு போர் நடந்திருக்கிறது.முஸ்லீம்கள் ஜெயிக்கும்போது அந்த இடம் மசூதியாகவும், இந்துக்கள் ஜெயிக்கும்போது அது கோயிலாகவும் மாறி மாறி கட்டப்பட்டுள்ளது.

முதல் இந்திய விடுதலைப்போர் கி.பி.1875 ஆம் ஆண்டு நடந்தது.அப்போது அயோத்தியைச் சேர்ந்த முல்லா (முஸ்லீம் மதத் தலைவர்), உள்ளூர் இந்துத் துறவியை அழைத்து, இந்த இடம் உங்களுக்கே சொந்தம் வைத்துக்கொள்ளுங்கள் என பத்திரமே பதிந்துவிட்டார்.
இதை அறிந்த பைசாசாபாத் மாவட்ட ஆட்சியாளராக இருந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் ஒருவன் இருவரையும் தூக்கிலிட்டான்.ஆதாரம்:பைசாசாபாத் மாவட்ட அரசு ஆவணங்கள்,கி.பி.1875.

இந்நிலையில், நம்ம ராகுல் காந்தி நேற்று ஒரு அறிக்கை விட்டார்.அதில் தகுதி இருந்தால் முஸ்லீம் ஒருவர் கூட இந்தியாவின் பிரதமராகலாம் என அதில் சொன்னார்.

அதற்கு சீறும் புலி பால்தாக்கரே தனது பத்திரிகையான சாம்னாவில் பதிலடி கூறியதை நாம் கவனித்தே ஆக வேண்டும்:

ராகுல் ஒன்றும் ஒட்டுமொத்த இந்தியாவின் முதலாளி அல்ல. இந்தியாவின் முஸ்லீம் சமுதாயம் குடும்பநலத்திட்டம், வந்தே மாதரம் பாடலை ஏற்றுக் கொள்ளுதல், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை ஆதரித்தல் = இவற்றை கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர்தான்,முஸ்லீம் ஒருவர் இந்தியாவின்பிரதமராக முடியும்.

(உலகத்தில் இந்துக்களுக்கு என இருப்பது ஒரே நாடு அது பாரதம் எனப்படும் இந்தியா மட்டுமே! கிறிஸ்தவ நாடுகள் 100 க்கும் மேலாக இருக்கின்றன.இஸ்லாமியநாடுகள் 40 க்கும் மேலாக இருக்கின்றன.இந்த நாட்டையும் முஸ்லீம்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு இந்துக்களாகிய நாங்கள் எங்கே போவது?இனிமேல், இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் விட்டுத்தர இந்துக்களாகிய எங்களுக்கு வேறு எதுவும் இல்லை;இனி விட்டுத்தர மாட்டோம்)

No comments:

Post a Comment