Friday 5 April 2013

நமது மகன்களுக்கு பண்பாடும்,ஆன்மீகமும் பற்றி அறிந்துகொள்ள ஒரு பயிற்சி முகாம்!!!



சுவாமி சித்பவானந்தர் ஆசிரமம் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால ஆன்மீக மற்றும் இந்துப் பண்பாடு சார்ந்த பயிற்சி முகாமை தேனியில் நடத்தி வருகிறது.இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதன் மூலமாக தியானம்,யோகாசனம்,மேலாண்மை ஆளுமைத் திறன்களைக் கற்றுக் கொள்ளலாம்;ஐந்து நாட்கள் நடக்கும் இந்தப் பயிற்சி முகாமில் பதினாறு முதல் நாற்பது வயது வரையிலான ஆண்கள் யாரும் கலந்து கொள்ளலாம்;முகாம் நாட்களில் வெளியில் செல்ல அனுமதி இல்லை;இந்த ஐந்து நாட்கள் பயிற்சி முகாமுக்கான நன்கொடை ரூ.ஐநூறு மட்டுமே!நன்கொடையினை நேரில் வந்து செலுத்தினால் போதும்;இது தொடர்பாக தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல் எண்கள்;ஸ்ரீஸ்வாமி பூர்ணானந்த 90039 34344 மற்றும் ஸ்ரீ ஜி.வி.நாராயணன் 94430 51910                                ஆஸ்ரம அலுவலகம்:+91 4546 253908                             மின் அஞ்சல்:swamiomkarananda@gmail.com
இளைஞர் முகாம்:
இடம்:ஸ்ரீஸ்வாமீ சித்பவானந்த ஆசிரமம்,சத்திரப்பட்டி சாலை,வேதபுரீ,தேனி.
நாள்:22.5.13 புதன் முதல் 26.5.13 ஞாயிறு வரை
முகாம் 21.5.13 மாலை ஏழு மணிக்குத் துவங்கி,26.5.13 அன்று மதிய உணவுடன் நிறைவு பெறும்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதால்,நமது ஆளுமைத்திறன்,தேசபக்தி,தெய்வபக்தி,தனித் திறன்கள் வெளிப்படும்;எதற்காகவும் சிறிதும் அஞ்சமாட்டோம்;ஒவ்வொரு சிறு விஷயத்திலும் ஆழ்ந்த கவனம் செலுத்த ஆரம்பிப்போம்;நமது முன்னோர்கள் கடந்த இருபது லட்சம் வருடங்களாக சாதித்த இந்து தர்மத்தின் சாதனைகளில் ஒரு பகுதியை உணர்ந்து கொள்வோம்.
விருப்பம் உள்ளவர்கள் 15.5.13க்குள் தங்களைப் பற்றிய ஒரு விண்ணப்பத்தினை பின்வரும் முகவரிக்கு போட்டோவுடன் அனுப்பி வைக்க வேண்டும்;
முகவரி:இளைஞர் முகாம்,ஸ்ரீஸ்வாமீ சித்பவாநந்த ஆசிரமம்,சத்திரப்பட்டி சாலை,வேதபுரீ,தேனி-625531.
நன்றி:விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம் 27;வெளியீடு: 12/4/13
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment