Wednesday 7 December 2011

Who is Bodhidharma ?

போதி தர்மர் இந்த மகானைப் பற்றிதான் அனைவரும் கேள்வி எழுப்பிக் கொண்டு இருகின்றனர்.  யார் இந்த போதி தர்மர் ? கி. பி. 6 ஆம் நூற்றாண்டில் நம் தமிழ் மண்ணில் பிறந்து வாழ்ந்து சீனர்களுக்காகவும் நம் இந்திய மக்கள் நலன் கருதியும் சீன தேசம் சென்று தனது அறிவாற்றலையும், போர்க்கலையையும் சீனர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அந்த மகான் 16௦ வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்ததாக வரலாற்றால் கூறப்படுகிறது. உண்மையும் அதுவே. சீனாவில் இன்று புத்த மதம் இந்த அளவிற்கு ஓங்கி நிற்பதற்கு காரணமும் அவரே. ஜப்பானிய மற்றும் சீன மக்கள் அவர் மீது கொண்ட பற்றுதல் காரணமாகவும், அந்த கலையை நேசித்தான் மூலமாகவும் 'தாமோ' என்று அவருடைய கலைக்கும் அவருக்கும்  பெயர் சூடி உள்ளனர். மேலும் பல கலைகளுக்கும் வெவ்வேறு தமிழ் பெயர் வைத்தனர். ஆனால் காலப்போக்கில் சீனாவில் ஏற்பட்ட மன்னராட்சி மற்றும் சில காரணங்களால் பொதுவாக 'குங் பு' என்று பெயர் சூடி விட்டனர்.   அத்தகைய போதி தர்மரைப் பற்றி இன்று நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் ? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதில்  நம் தவறு எதுவும் இல்லை. ஏனெனில் நமது ஆட்சி முறைகளும் கல்வி திட்டங்களும் அந்த அளவிற்கு உள்ளன. இன்று நேருவைப் பற்றி தெரிந்த அளவிற்கு யாருக்கும் சாவர்கர் பற்றி தெரியாது. காந்தி பற்றி தெரியும் அளவிற்கு யாருக்கும் வாஞ்சிநாதன் பற்றி தெரியாது. நம் தமிழ் பெரியோர்களும் பொக்கிசங்களும் அந்த அளவிற்கு அளிக்கப்பட்டதுடன் மறைக்கவும் பட்டு இருக்கிறது. இந்த அறிய தகவலை இந்த உலகிற்கு தெரியப்படுத்திய முருகதாஸ் அவர்களுக்கு என்னுடைய மற்றும் தமிழ் பற்று உள்ளவர்களின் கோடி நன்றிகள். இந்த ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பார்த்து விட்டு ஜப்பானில் இருக்கும் போதி தர்மரின் சீடர்களின் வம்ச வழியினை சேர்ந்தவர்களும், அவருடைய ரசிகர்களும் வீரத்திற்கும், பாசத்திற்கும், சிவ வழிபாட்டிற்கும் பெயர் பெற்ற காஞ்சிபுரத்திற்கு வருகை தர உள்ளனர். அங்கு அவரைப் பற்றி மேலும் பல அறிய தகவலை கொடுத்து மானமிகு மகான் போதிதர்மர் நினைவாக ஒரு நினைவு மண்டபம் எழுப்ப உள்ளனர். (எதற்கெடுத்தாலும் அண்டை நாடு உடன் சண்டை போட்டு கொள்வதையும், எல்லாவற்றுக்கும் தாமே மேலாக இருக்க வேண்டும் என்று ஆசைபடும் எண்ணமும், கொண்ட அந்த மக்களே தமிழ்நாட்டிற்கு வந்து போதி தர்மருக்கு நினைவிடம் கட்ட நினைப்பது வரவேற்கத்தக்கது ). உடனே சொல்லுவிங்களே நமாளுங்களும் இருக்கானுங்களே இப்டி ஏதாவது  பன்னுனானுங்கலன்னு உங்க வாய்ஸ் எனக்கு கேட்குது. சும்மா விடுவோமா நாம? போதி தர்மர் பற்றி மேலும் உளவியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருகின்றனர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர். விரைவில் அந்த தமிழ் அமைப்பு " போதி தர்மன் சென்டர் பார் இந்தியன் கிளாஸ் " என்று ஒரு கலை கூடத்தை அமைக்க உள்ளனர். அவர்களுக்கு நம் நன்றிகளை தெரிவித்து கொள்வோம். அங்கு அவருடைய அறிய கலையை கற்று தரப்படும். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment